Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

திங்கள், நவம்பர் 30, 2009

Alagunilaa Inayam: உங்கள் முகம் பளபளப்பாக வேண்டுமா?

Alagunilaa Inayam: இரவு உறங்கும் முன்பு மஞ்சள் அல்லது சந்தனத்தை முகத்தில் தேய்த்துவிட்டு படுக்கவும். காலையில் முகத்தை கழுவிவிட்டு கண்ணாடி முன்நின்று பாருங்கள்

உங்கள் முகம் பளபளப்பாக வேண்டுமா?




* இரவு உறங்கும் முன்பு மஞ்சள் அல்லது சந்தனத்தை முகத்தில் தேய்த்துவிட்டு படுக்கவும். காலையில் முகத்தை கழுவிவிட்டு கண்ணாடி முன்நின்று பாருங்கள். உங்கள் வசீகர முக அழகைப் பார்த்து நீங்களே பொறாமை கொள்வீர்கள்.
* ஆரஞ்சு சாறு, முள்ளங்கிச்சாறு, உளுந்துமாவு - இந்த மூன்றையும் ஒவ்வொரு ஸ்பூன் வீதம் எடுத்து தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசவும். தொடர்ந்து 2 வாரங்கள் இப்படி செய்து வந்தாலே போதும். முகம் பளபளக்க ஆரம்பித்து விடும்.
* சிலருக்கு கண்ணுக்கு கீழ் உள்ள கரு வளையம் பாடாய் படுத்தும். அழகான கண்களுக்கு அது மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்துவிடும். அப்படிப்பட்டவர்கள் வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால் கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.
* கஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் அவை வந்த அடையாளங்கள் மாயமாகிவிடும்.
* உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பளபளப்பு பெறும்.

Alagunilaa Inayam: தேங்காய் உடைப்பதன் தத்துவம்

Alagunilaa Inayam: கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை

தேங்காய் உடைப்பதன் தத்துவம்


கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.


தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.
உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.
இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

எம்.ஈ.ஜீவரத்தினம்

Alagunilaa Inayam: திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ?

Alagunilaa Inayam:அரச மரத்தின் அரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனியில் சிவமூர்த்தியும் இருக்கிறார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலிகள் அரசமரத்தின் கிளயப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசித் மும்மூர்த்திகளயும் அங்கு எழுந்தருளச் செய்கின்றார்கள். பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனியில் சிவமூர்த்தியும் இருக்கிறார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலிகள் அரசமரத்தின் கிளயப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசித் மும்மூர்த்திகளயும் அங்கு எழுந்தருளச் செய்கின்றார்கள்.

உடலெனும் பிரபஞ்சம்

Alagunilaa Inayam: ன நிலையையும் அதோடு தொடர்புடைய உடல் நிலையையும் பொறுத்து உச்சந்தலையில் உள்ள தனஞ்செயனில் உற்பத்தியாகும் கிலேச நீரின் செயல்பாடுகள் வாத, பித்த உடற்கூறுகளுக்கு தகுந்தவாறு மனத்தையும்,

கார்த்திகை தீபம் ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

Alagunilaa Inayam: புழுக்கள், பூச்சிகள், பறவைகள், மரங்கள், பிற தாவரங்கள், நீர் வாழ்வன, சாதி, மத, பேதமில்லாத வகையில் அனைத்து மக்கள், இன்னும் எத்தனை உயிரினங்கள் உண்டோ அவை எல்லாமுமாக, யாரெல்லாம் இந்த தீபத்தை தரிசிக்கின்றார்களோ,

ஞாயிறு, நவம்பர் 29, 2009

ஆடு தீண்டாப் பாளை




டந்த இதழில் நீர்முள்ளியின் மருத்துவக் குணங்கள் பற்றி தெரிந்துகொண்டோம். இந்த இதழில் ஆடு தீண்டாப் பாளையின் மருத்துவக் குணங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

ஆடுதீண்டாப் பாளை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது தென்னிந்தியாவில் திருவாங்கூரிலும், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளிலும், இலங்கையிலும் அதிகம் காணப் படுன்றது.

இதனை ஆடுதின்னாப்பாளை, ஆடுதொடாப் பாளை, பங்கம்பாளை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Adu thinna palai

English - Bracteated birth wort

Sanskri - Dhuma patra

Malayalam - Aadu tinlappala

Telugu - Gadug gudupa

Botanical Name - Aristolochia bracteata

கிரந்திகரப் பன்வெக்கை கேசநலி மாந்தை

யரந்தை வினையை யறுக்கும்துறந்து

பிரியொணா நோய்களையும் பின்முன்பா ராமல்

மறியுணா மூலியடை வாய்

(தேரையன் வெண்பா)

ஆடுதொடாப் பாளைக் ககக்கிருமி வன்சிலந்தி

நீடுகருங் குட்டம் நிறைகரப்பான்ஆடிடச் செய்

எண்பது வாய்வும் இகல்குட்ட முந்தீரும்

திண்பெருநற் றாதுவுமாஞ் செப்பு

(அகத்தியர் குணபாடம்)

உடல் வலுப்பெற

உடல் உழைப்பு குறைந்து போனதாலும், இயற்கையான ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை உண்பதாலும் இன்று பலருக்கும் உடல் வலு குறைந்து வருகிறது. இவர்கள் சிறிது கடினமான வேலையை செய்தாலும் உடனே சோர்ந்துவிடுவார்கள்.

இவர்கள் ஆடுதீண்டாப் பாளை இலையை காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.

வயிற்றுப் பூச்சிகள் நீங்க

வயிற்றுப் பூச்சிகள் உடலில் பல தொந்தரவுகளை உண்டுபண்ணுகின்றன. இவற்றால் வயிற்றில் புண்கள் உருவாகின்றன. சிறு குழந்தைகள் இந்த வயிற்றுப் பூச்சியினால் அடிக்கடி வாந்தி பேதிக்கு ஆளாக நேரிடுகிறது.

இவர்களுக்கு ஆடுதீண்டாப் பாளையை நிழலில் உலர்த்தி நன்றாக பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் விரைவில் நீங்கும்.

நீர்மலம் நீங்

மலமானது நீராக வெளியேறுவதால் உடலில் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டாகிறது. இந்த நீர் மலம் நீங்க ஆடுதீண்டாப் பாளை இலைகளை உலர்த்தி கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது.

பூச்சி கடிகளுக்கு

சில சமயங்களில் வண்டுகள், பூச்சிகள் கடிப்பதால் விஷமுண்டாகி சருமத்தில் தடிப்பு, கொப்புளம் போன்று உண்டாகும்.

இதற்கு ஆடுதீண்டாப்பாளை இலைகளை எடுத்து அரைத்து பூச்சி கடித்த இடத்தில் பற்று போட்டால் விஷம் முறியும். தடிப்புகள் மேலும் சருமத்தில் பரவாமல் தடுக்கும்.

கரும்படை கரப்பான் நீங்க

ஆடுதீண்டாப் பாளை இலைகளை அரைத்து தோலில் ஏற்படும் கரும்படை கரப்பான் இருக்கும் இடங்களில் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

தலைமுடி உதிர்வதைத் தடுக்க

தலையில் முடி கொட்டுகிறது என்ற கவலை உள்ளவர்கள் ஆடுதீண்டாப் பாளை இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சீயக்காய் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது உடனே நிற்கும்.

பெண்களுக்கு

சில பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் சூதக வலி, வயிற்று வலி, ஓழுங்கற்ற இரத்தப் போக்கு போன்றவற்றால் பெரிதும் அவதியுறுவார்கள். இவர்கள் ஆடு தீண்டாப் பாளை இலைகளை கஷாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து எளிதில் விடுபடலாம்.

மேலும் ஆடுதீண்டாப் பாளை விதைகளை எடுத்து அரைத்து வெந்நீரில் கலந்து கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுத்தால் பிரசவ நேரத்தில் உண்டாகும் வேதனை குறையும்.

இத்தகைய மருத்துவக் குணம் கொண்ட ஆடுதீண்டாப் பாளையை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

பின்னோக்கி நடை...

டைப்பயிற்சி உடலுக்கு வலுவைத் தருவதுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இன்று நடைப்பயிற்சி செய்பவர்களில் 85 சதவிகிதம் பேர் நோய்களின் பாதிப்புக்கு ஆளானவர்கள். இனி நீங்கள் நடைப்பயிற்சி செய்வதுதான் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவர் அறிவுறுத்திய பிறகுதான் நடைப்பயிற்சி செய்ய ஆரம்பிக்கின்றனர்.

முன்பெல்லாம் மக்கள் எல்லோரும் தூரத்தில் இருக்கும் இடத்திற்குச் செல்வதென்றால் கூட நடந்தே செல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் அடுத்த தெருவிற்கு செல்வ தென்றால் கூட வாகனத்தை பயன் படுத்துகின்றனர். நடை என்பது பலருக்கு சுத்தமாக மறந்துபோய்விட்டது.

பழங்காலத்தில் அரசர்கள், செல்வந்தர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் காக்க ஆன்மீகத் தலங்களுக்கு நடந்து செல்வார்கள். இதனால்தான் அவர்கள் நோய்களின் தாக்கமின்றி வாழ்ந்தனர்.

இப்போது மேல் மாடிக்கு கூட ஏற முடியாமல் தவிப்பவர்கள்தான் ஏராளம். முதல் தளத்திற்கு செல்வ தென்றால் கூட லிப்ட்-க்காக காத்து நிற்கின்றனர்.

இப்படியாக பலருக்கு நடை என்பதே மறந்துபோய்விட்டது. இது போல் பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாட்டு என்பதே இருப்பதில்லை. அவர்கள் உடல் பிற்காலத்தில் எப்படி ஆரோக்கியமாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

பொதுவாக அனைவரும் காலையில் 1/2 மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது. அதற்கெல்லாம் நேரமில்லை என்று கூறுவது சோம்பேறித்தனம் தான்.

நாம் கடந்த இதழ்களில் நடைப்பயிற்சி, மெல்லோட்டம் பற்றி அறிந்தோம். இந்த இதழில் பின்னோக்கி நடை பற்றி தெரிந்துகொள்வோம்.

நடைப்பயிற்சி செய்யும்போது 10 நிமிடம் பின்னோக்கி அதாவது பின்பக்கமாக சிறிது தூரம் நடப்பது நல்லது. இவ்வாறு பின்னோக்கி மெதுவாக நடப்பது நல்ல உடற்பயிற்சி செய்வதற்கு சமம்.

பின்னோக்கி நடப்பதால் முதுகு தண்டுவடப் பகுதி பலம் பெறும். இதனால் முதுகு வலி, தோள் பட்டை வலி நீங்கும். பின்னோக்கி நடக்கும்போது கழுத்துப் பகுதியை அங்கும் இங்கும் திருப்புவதால் கழுத்து வலி நீங்கும். மேலும் தோள் பிடிப்பு இடுப்புப் பிடிப்பு குறையும். சுவாசம் சீராகும்.

இரத்த ஓட்டம் சீராகும். மன அழுத்தம் குறையும்.

தொடை, கால்களில் உண்டாகும் வலி நீங்கும்.

கால் பாதங்களில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதால், பாதங்களில் உள்ள வர்மப் புள்ளிகள் தூண்டப்படுகிறது. இதனால் உடல் புத்துணர்வு பெறுகிறது.

உடலில் வியர்வை நன்கு வெளியேறும்.

மேலும் உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும்.

சர்க்கரை நோயின் பாதிப்புள்ளவர்களுக்கு பின்னோக்கிய நடையினால் உடல் புத்துணர்வு பெறும்.

தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்யும்போது சிறிது நேரம் பின்னோக்கி நடந்து வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். 

முகத்தில் முகம் பார்க்கலாம்

யற்கையின் படைப்பில் அனைத்துமே அழகுதான். அழகை சீராக பராமரிப்பதன் மூலம் தான் ஆரோக்கியமான அழகை பெறமுடியும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

உடலின் உள்ளே நோயின் தாக்கம் இருந்தால் அதன் வெளிப்பாடு முகம் மற்றும் சருமப் பகுதிகளில் தெரியவரும். இன்றைய நாகரீக உலகில் காற்றும், நீரும் மாசடைந்துள்ளன. மேலும் வாகன புகைகளின் காரணமாக உடல் அலர்ஜி உண்டாகி சருமப் பாதிப்பு உண்டாகிறது.

எண்ணெய் வழியும் சருமத்திற்கு

சிலருக்கு எவ்வளவுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாலும் முகத்தில் எண்ணெய் பசை மாறாது. மேலும் மேக்கப் செய்த சிறிது நேரத்தில் முகத்தில் எண்ணெய் வழியும். கெமிக்கல் கலந்த முகப் பூச்சுகளால் அலர்ஜி உண்டாகுமே தவிர முழுமையான பலன் கிடைக்காது.

இவர்கள் கடைந்த மோரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் அதாவது 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம்சூடான நீரில் கழுவி வந்தால் எண்ணெய் வழியும் சருமம் மாறும்.

மேலும் தினமும் உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணக் கோளாறு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அதுபோல் வாயுவை அதிகரிக்கக் கூடிய உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக கெமிக்கல் அல்லாத மூலிகை சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.

முகம் பளிச்சிட

சிலருடைய முகம் எப்போது பார்த்தாலும் இருண்டே காணப்படும். எவ்வளவுதான் கிரீம்கள் தடவினாலும் முகம் பளிச்சிடாது. இவர்கள் முட்டைகோஸ் மற்றும் காரட் போன்றவற்றின் வேகவைத்த தண்ணீரை கீழே கொட்டிவிடாமல் அதை ஆறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று மாறும் .

கருப்பு திராட்சை 25 கிராம் வாங்கி அதன் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.

முகப்பரு மாற

முகப்பரு இக்கால தலைமுறையினருக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்குகிறது. உணவு முறை மாறுபாட்டாலும், உடலின் வளர்சிதை மாற்றத்தாலும் முகப்பரு உண்டாகிறது. முகப்பரு தொல்லையால் அவதிப்படுபவர்கள்

வெந்தயக் கீரை - 1 கைப்பிடி

துளசி இலை - சிறிதளவு

கொத்துமல்லி இலை - சிறிதளவு

எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவினால் முகப்பரு மாறும். கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.. எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் பருக்கள் குறையும்.

வெள்ளரி - 2 துண்டு

தக்காளி - 2 துண்டு

கேரட் - 2 துண்டு

எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடங்கள் ஊறியபின் கழுவினால் பருக்கள் மறையும். ஆண்கள் இதனை உபயோகிக்கக் கூடாது.

புருவங்கள் அடர்த்தியாக

சிலருக்கு புருவங்கள் அடர்த்தியாக வளராமல் விட்டு விட்டு மெலிதாக வளர்ந்திருக்கும். இவர்கள் தேங்காய் பாலை காய்ச்சி எடுத்த எண்ணெயை புருவங்களின் மீது தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். அல்லது விளக்கெண்ணெய் தடவி வந்தால் புருவம் அடர்த்தியாக வளரும். 


http://www.nakkheeran.in

வர்மத்தின் மர்மங்கள்




னித உடம்பினுள் உள்ள நரம்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் மூளையின் நரம்பு மண்டலத்திலிருந்து இயக்கப்படுகிறது. நரம்பு மண்டலத்தின் பிரதான சக்தியாக மூளை விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் அனைத்தும் மனித உடம்பின் ஆதாரங்களை பொறுத்தே அமைகிறது. இந்த ஆதாரங்கள் ஒடுங்கும் இடம்தான் தனஞ்செயன் என்ற வாயு அமைந்திருக்கும் பகுதியாகும்.

இந்த ஆதாரங்கள் சரசுவாசம் செய்யும்போது ஒரே நேர்க்கோட்டில் மூலாதார சக்தியை மேல் எழும்பி தனஞ்செயனை அடையும்போது உச்சந்தலை சுவாசம் திறந்து கொள்கிறது. அப்போது நெற்றி புருவங்களிடையே திலர்த காலமாகிய வர்மப் புள்ளியில் ஒளிப் பிழம்பாக தெரியவரும் என்பதை கடந்த இதழ்களில் கண்டோம். அதுதான் சித்தர்கள் கூறும் ஞான ஒளியாகும்.

ஆதாரங்கள் தான் மனித செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமாகின்றன. ஆதாரங்கள் தான் நரம்பு மண்டலத்தை தூண்டி சீராக செயல்பட வைக்கிறது.

ஆதாரங்களின் நலமே உடலின் நலம்.

ஆதாரங்களின் செயல்பாடு மாறும்போது உடலும், மனமும் பாதிக்கப் படுகிறது. ஆதாரங்கள் சீராக செயல்பட்டால்தான் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மன எண்ணங்கள் ஒழுங்கு பெறும். உடலை இயக்குகின்ற வாத, பித்த, கபம் மூன்றும் ஆதாரங்களின் செயல்பாட்டை பொறுத்தே அமைகிறது. தசவாயுக்களின் செயல்பாடுகளும் ஆதாரத்தை பொறுத்தே சீர்படுகிறது.

ஆதாரங்களை சீர்படுத்த சரசுவாசமே சிறந்த வழியாகும். சாதாரண நாசி வழிச்சுவாசம் மூலம் ஆதாரங்களை ஒருநிலைப்படுத்துவது கடினம். நாசிவழி சுவாசத்தில் ஆதாரங்களுக்கு பிராண வாயு முழுமையாக கிடைப்பது அரிது. இதனாலேயே பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுகிறது. குறிப்பாக ஆதாரங்களுக்கு பிராண வாயு முழுமையாக கிடைத்தாலே நோய்கள் ஏதும் அணுகாது என்பது சித்தர்களின் கூற்று.

இதனால்தான் சித்தர்களும், முனிவர்களும், ஞானிகளும் தியானம் மூலம் சரசுவாசத்தை மேற்கொண்டு ஆதாரங்களை நிலைப்படுத்தினர்.

நாசி வழி சுவாசம், சரசுவாசம் என்ற மூச்சுக்களால்தான் ஆதாரங்களுக்குத் தேவையான பிராண வாயு கிடைக்கும். இந்த ஆதாரங்களைப் பற்றி விரிவாகக் காண்போம்.


மூலாதாரம்

காணவே மூலமஃதண்டம் போலக்

காரணமாய்த் திரிகோணமாக நிற்கும்

பூணவே மூன்றின் மேல் வளையமாகும்

புறம்பாக இதழதுவும் நாலுமாகும்

நாணவே நாற்கமலத் தட்ச ரங்கள்

நலமான வ-ச-ஷ ஸவ்வுமாகும்

மூணவே முக்கோணத் துள்ளொளியோங் கார

முயற்சியாய் அதற்குள்ளே அகரமாமே

தானான மகிமாமாவும் கரிமாவோடு

தங்கு மீ சத்துவமும் வசித்துவ மாகும்

பூனான பிரார்த்தி பிரா காம்யத்தோடு

புகழெட்டுத் தேவதையும் தளத்தில் நின்றே

ஏனான இதழாலே மூடிக்கொள்வார்

ஏற்றமாம் நந்தியைத் தான் கானொட்டாமல்

ஓங்கியே மாணிக்க ஒளிபோல் தோன்றும்

உத்தமனே மூலத்தின் உண்மை காணும்

(போகர் ஏழாயிரம் - முதலாமாயிரம்)

மூலமும் ஆதாரமும் ஒரே இடத்தில் ஒடுங்குவதால்தான் அதனை மூலாதாரம் என்கிறோம். மூலம் என்பது உடம்பில் உள்ள அனைத்து சக்திகளும் ஒடுங்கியிருக்கும் இடமாகும். அந்த இடத்திலிருந்துதான் ஆதாரங்களுக்கு சக்தி செல்கிறது.

கால் எலும்பு இரண்டும் கதிர் எலும்பும் கூடும் இடம் குய்யம். இந்த குய்யத்திற்கும் குதத்திற்கும் நடுவே குண்டலிவட்டமாய் அமைந்துள்ளதுதான் மூலாதாரம். அதாவது தொடை எலும்பு, முதுகெலும்பு இணையும் இடத்தில் தான் மூலாதாரம் அமைந்துள்ளது. அந்த குண்டலி வட்டத்திற்கு நடுவே திரிகோணமாக அமைந்திருக்கும். அதனுள் கடம்பப் பூ போல் நான்கு இதழ்களையுடைய பூவாக காணப்படும். அந்தப் பூவின் நடுவே ஓங்காரம் தெரியும். அங்குதான் ஓங்கார சக்தி ஒடுங்கியுள்ளது. இதையே மூலாதாரம் என்கின்றனர். இது மாணிக்க நிறம் கொண்டது.

முக்கோணம்

நான்கிதழ்கமலம்

மாணிக்க நிறம்

குண்டலி சக்தி

ஓங்காரம்

இதனை குண்டலினி சக்தி என்றும் அழைக்கின்றனர்.

வெள்ளி, நவம்பர் 27, 2009

இயற்கை தரும் பாடம்!




“மரத்தையும், கல்லையும், விஷம் கக்கும் பாம்பையும் மனி தன் வணங்குகிறானே… மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக்கி யுள்ளானே… இதெல்லாம் மூடநம்பிக்கை இல்லையா?’ என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்.
தத்தாத்ரேயர் இவர்களுக்கெல் லாம் பதில் சொல்லி உள்ளார். இவர், அத்திரி முனிவர்- அனுசூயா தம்பதியின் புதல்வர். பெரிய ரிஷியாக விளங்கினார்.
தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.
“எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்…’ என்றார்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், “சுவாமி! ஒரு வருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே…’ என்றான்.
அவனிடம், “பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்…’ என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்…
“மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்; தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன். பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன். எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது; பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.
“ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
“வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.
“எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன். பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
“எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன். பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
“பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.
“புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்…’ என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.
இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே!
சென்னை கந்தாஸ்ரமத்தில், தத்தாத்ரேயருக்கு தனி சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் இவரது ஜெயந்தி விழா சிறப் பாக நடத்தப்படுகிறது. இது தவிர, ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், தத்தாத்ரேயருக்கு சிறப்பு அபிஷேகமும் நடை பெறுகிறது.

தலையிலேயே விடிந்த சாபம்!




பகவானிடம் பக்தி வைத்து வழிபட்டு, அவனருள் பெறுவது தான் பக்தர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். “அதைக் கொடு, இதைக் கொடு’ என்று கேட்பதில்லை பகவான். “பகவானே… எனக்கு உயர்ந்ததென எதைக் கொடுக்க விரும்புகிறாயோ, அதையே கொடு…’ என்று கூறினாலே போதும்; கிடைக்கும். கீதோபதேசம் முடிந்ததும், “கிருஷ்ணா… நீ சொன்னதையெல் லாம் கேட்டேன். இப்போது நான் எதைச் செய்தால் கீர்த்தியும், மேன்மையும் ஏற்படுமோ, அதைச் சொல்; செய்கிறேன்…’ என்று, முடிவை பகவானிடமே விட்டு விட்டான் அர்ஜுனன்.
மகாபாரதத்தில் யுத்தம் நடந்த போது, ஜயத்ரதன் என்பவனை, சூர்யஸ்தமனத்துக்குள் கொன்று விடுகிறேன் அல்லது தீக்குளிப்பேன் என்று சபதம் செய்தான் அர்ஜுனன். அன்று காலையிலிருந்து ஜயத்ரதன், மறைவாகவே இருந்தான். துரியோதனன், கர்ணன் போன்றவர்கள், அவனுக்குப் பாதுகாவலர்களாக இருந்தனர்.
அர்ஜுனனால் ஜயத்ரதனை நெருங்கவும் முடியவில்லை; அவன் இருக்கும் இடமும் தெரியவில்லை. மாலை நேரமும் வந்துவிட்டது. “என்ன கிருஷ்ணா… சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே… ஜயத்ரதனை எப்படிக் கொல்வது?’ என்று கேட்டான்.
சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் பகவான்; இருள் சூழ ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான். “சூரியன் அஸ்தமித்து விட்டான். இனி, அர்ஜுனன் தீக்குளித்து விடுவான்…’ என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான். உடன், அர்ஜுனனைப் பார்த்து, “அதோ, ஜயத்ரதன் தலை தெரிகிறது…
ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து, தலை கீழே விழாமல், அருகில் சமந்த பஞ்சகத்தில் உள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு…’ என்றார் கிருஷ்ணன்.
இந்த ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் விருத்தட்சரன். அவர் கோரமான தவம் செய்ததன் பலனாக, இந்த பிள்ளையைப் பெற்றார். அந்த பிள்ளை பிறந்ததும் ஒரு அசரீரி, “உன் புத்திரன் எல்லாராலும் கொண்டாடப்பட்டு, மகாவீரனாக இருப்பான். மிக்க கோபமும், பராக்ரமும் உள்ள ஒரு வீரனால் இவன் தலை அறுபட்டு மாள்வான்…’ என்றது.
இதைக் கேட்ட விருத்தட்சரன், “தன் தவ வலிமையால், யுத்த களத்தில் எவன் என் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ, அவனது தலை நூறு சுக்கல்களாக சிதறிப் போகட்டும்…’ என்று சாபம் விட்டார்.
இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி, “உன்னால் அறுபட்டு இந்தத் தலை கீழே விழுந்தால் உன் தலை நூறு சுக்கல்களாக வெடித்து விடும். அதனால், அருகிலுள்ள அவனது தகப்பனார் விருத்தட்சரனுடைய மடியில் அந்தத் தலையைத் தள்ளு…’ என்றார் கிருஷ்ணன்.
அர்ஜுனனும் அப்படியே செய்தான். அந்த சமயம், பூமியில் அமர்ந்து விருத்தட்சரன் சந்தியோ பாசனம் செய்து கொண்டிருந்ததால், மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை.
பிறகு, அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது மடியில் கனமாக ஏதோ இருப்பதைக் கண்டு அதை கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் பிள் ளையின் தலையை எவன் பூமியில் தள்ளுகிறானோ, அவன் தலை நூறு சுக்கல்களாகும் என்று இவரே சொல்லியிருந்தபடி இவரது தலையே சுக்கல்களாகியது.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நம்முடைய எண்ணம் எப்படியெல்லாமோ இருக்கும்; ஆனால், பகவானுடைய சித்தம் வேறு விதமாக இருக்கும். மனிதனை மனிதன் ஏமாற்றி விடலாம்; தெய்வத்தை ஏமாற்ற முடியாது.
நாம் என்ன தான் தந்திரமான சூழ்ச்சி செய்தாலும், சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், என்ன நடக்க வேண்டுமென்பதையும், அதை எப்படி நடத்தி வைக்க வேண்டுமென்பதையும் தீர்மானம் செய்வதும், நடத்தி வைப்பதும் பகவான் தான்.
அதனால், எல்லாப் பொறுப்புகளையும் அவனிடம் ஒப்புவித்து விட்டு, “பகவானே… எல்லாம் உன் சித்தம்! எது நல்லதோ, அதைச் செய்!’ என்று சொல்லி, அவனையே சரணடைந்து விட்டால் போதும்… காப்பாற்ற வேண்டியது அவன் கடமை, அவன் செய்வான்!

வாழை‌ப் பழ‌ம் எ‌‌ன்பது ‌மிகவு‌ம் ம‌லிவான ‌விலை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் பழ‌ம் எ‌ன்ற போ‌திலு‌ம், அ‌தி‌ல் ‌இ‌ரு‌க்கு‌ம் ச‌‌த்துகளு‌ம், மரு‌த்துவ குண‌ங்களு‌ம் வேறு எ‌ந்த பழ‌த்‌திலு‌ம் இரு‌க்காது. ப‌ல்வேறு நோ‌‌ய்களு‌க்கு வாழை‌ப்பழ‌ம் மரு‌ந்தாகவு‌ம் அமை‌கிறது.

அதாவது, நெஞ்செரிப்பு நோ‌ய் உ‌ள்ளவ‌ர்க‌ள், வாழ‌ை‌ப் பழ‌ம் சா‌ப்‌பிடலா‌ம். வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் ‌விரை‌வி‌ல் ‌குணமா‌கி‌விடும்.உடற்பருமனாக இரு‌ப்பவ‌ர்களு‌ம், மெ‌லி‌ந்த தேக‌ம் கொ‌ண்டவ‌ர்களு‌‌க்கு‌ம் வாழை‌ப் பழ‌ம் பய‌ன்தரு‌ம். அதாவது உட‌ற் பருமனாக இரு‌ப்பவ‌ர்க‌ள் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து வ‌ந்தா‌ல் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ‌நிலையான தன்மைக்கு கொண்டு வருவதா‌ல் உடற்பருமன் குறைவதாக அந்த மரு‌த்துவ ஆ‌ய்வுக‌ள் தெரிவிக்கின்றன.
மேலு‌ம், ஒ‌ல்‌லியான தேக‌ம் கொ‌ண்டவ‌ர்க‌ள் ‌தினமு‌ம் இர‌ண்டு வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் உட‌ல் எடை கூடு‌ம் எ‌ன்று‌ம் அ‌றிய‌ப்படு‌கிறது. ‌தினமு‌ம் ஒருவ‌ர் ஒரு வாழை‌ப் பழ‌த்தை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் அவரு‌க்கு இய‌ற்கையாக ஏ‌ற்படு‌ம் பல ‌வியா‌திக‌ள் உ‌ண்டாகாது எ‌ன்பது பலரு‌ம் அ‌றி‌ந்தது.அ‌ல்ச‌ர் என‌ப்படு‌ம் குடற்புண்‌ ஏ‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது. பொதுவாக நமது ம‌ண்‌ணி‌ல் ‌விளையு‌ம் மர‌ம் வாழை மரமாகு‌ம். எனவே, இது நமது உடலு‌க்கு ஏ‌ற்ற‌ப் பழமாகவு‌ம் கருத‌ப்படு‌கிறது.

ஒரு ‌ஆ‌ப்‌பிளை சா‌ப்‌பிடுவதா‌ல் ‌கிடை‌க்கு‌ம் ச‌க்‌தியை ‌விட, வாழை‌ப் பழ‌த்‌தி‌ன் மூலமாக நமது உடலு‌க்கு ஏராளமான ச‌த்துகளு‌ம், ந‌ன்மைகளு‌ம் ‌கிடை‌க்‌கி‌ன்றன எ‌‌ன்பதை யாராலு‌ம் மறு‌க்க முடியாது. உட‌லி‌ன் த‌ட்பவெ‌ப்ப‌நிலையை ‌சீராக வை‌ப்ப‌தி‌லு‌ம் வாழை‌‌ப்பழ‌ம் அ‌திக‌ம் உதவு‌கிறது. வெ‌ப்பமான பகு‌தி‌யி‌ல் வேலை செ‌ய்பவ‌ர்களு‌ம், உட‌ல் சூடு கொ‌ண்டவ‌ர்களு‌ம் வாழை‌ப் பழ‌‌ம் சா‌ப்‌பிடலா‌ம். வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் என்ற பெயரும் உண்டு.‌ஸ்‌ட்ரெ‌ஸ் என‌ப்படு‌ம் மன அழுத்த நோ‌ய் தா‌க்‌கியவ‌ர்களு‌க்கு வாழைப்பழத்தில் இரு‌க்கு‌ம் பொட்டாசியம் இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் ‌விரை‌வி‌ல் நீங்கும் எ‌ன்பது தெ‌ளிவா‌கிறது. புகைப்பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தவ‌ர்க‌ள் அதனை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று முடிவெடு‌த்தா‌ல் அத‌ற்கு வாழை‌ப்பழ‌ம் உத‌விகரமாக இரு‌க்கு‌ம்.
வாழைப்பழத்தில் அ‌திகமாக இரு‌க்கு‌ம் B6, B12, புகைப்பிடிப்பதால் ஏற்படும் ‌நிகோடினை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பத‌ற்கு உதவு‌ம். இதனா‌ல் எ‌ளிதாக புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம். காலை‌யி‌ல் ‌சிலரா‌ல் ‌எழு‌ந்‌தி‌ரி‌க்க முடியாம‌ல் அவ‌தி‌ப்படுவா‌ர்க‌‌ள். இதனை காலை தூ‌க்க நோ‌ய் எ‌ன்று கு‌றி‌ப்‌பிடுவோ‌ம். இத‌ற்கு அவ‌ர்க‌ள் ஒ‌வ்வொரு உணவு இடைவேளை‌க்கு ஒரு முறை வாழை‌ப் பழ‌த்தை சா‌ப்‌பி‌ட்டா‌ல் இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.
வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது. எனவே ர‌த்த சோகை இரு‌ப்பவ‌ர்களு‌ம், க‌ர்‌பி‌ணிகளு‌ம் வாழை‌ப் பழ‌த்தை சா‌ப்‌பிடுவது ந‌ல்ல பல‌ன் தரு‌ம். வாழை‌ப் பழ‌த்‌தி‌ல் குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடியுமென்று அமெரிக்க அரசு உணவு நிறுவனம் தெ‌ரி‌வி‌க்‌கிறது. எனவேதா‌ன் அ‌ந்த கால‌த்‌‌திலேயே, வெ‌ற்‌றிலையுடனு‌ம், சா‌மி‌க்கு‌ப் படை‌க்கவு‌ம், தா‌ம்பூல‌ம் வை‌த்து‌க் கொடு‌க்கவு‌ம் இ‌வ்வளவு ‌சிற‌ப்பு வா‌ய்‌ந்த வாழை‌ப் பழ‌த்தை பய‌ன்படு‌த்‌தியு‌ள்ளன‌ர். எனவே இ‌ந்த பழ‌த்தை சா‌ப்‌பிடு‌ம்போது பலரு‌க்கு‌ம் ந‌ல்ல பய‌ன் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்ற ‌சி‌‌ந்தனையோடு வாழை‌யி‌ன் பய‌ன்பா‌ட்டை உறு‌தி‌ப்படு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

நாமு‌ம் வாழை‌யி‌ன் பயனை அடைவோ‌ம்.

www.tamilkathir.com

திங்கள், நவம்பர் 23, 2009

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்




உடல் நலக் குறிப்புகள்

கொழுப்பு கொலஸ்டிரால், வித விதமான எண்ணெய்ப் பொறியல் முதலியவற்றை அதிகம் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் எளிதில் சேரும். மேலும் தினமும் பத்து டம்ளர் தவறாமல் தண்ணீர் அருந்த வேண்டும். அமெரிக்க மருத்துவரான சூசன் லார்க் அல்லோபதி மருத்துவம் பார்ப்பவர். இவரோ இந்திய மூலிகை மருந்துகளையே சிறுநீரகக் கற்களுக்குச் சக்தி வாய்ந்த மருந்துகள் எனக் கண்டுபிடித்துள்ளார். இவற்றுள் மஞ்சள், டான்டெலின் (மலர்ச்செடி), ஆர்ட்டி சோக் (முள்ளினச்செடி) என இவை மூன்றும் முக்கியம் என்கிறார். இவை கூட்டு மாத்திரைகளாக விற்கப்படுகின்றன. இவற்றுடன் வைட்டமின் ‘சி’ வைட்டமின் ‘ஈ’ அகிய மாத்திரைகளை அதிக டோஸ் கொடுத்துக் குணப்படுத்துகிறார். உங்கள் உணவில் 50% ஆவது பழங்களும் காய்கறிகளும் இடம் பெற்றால் சிறுநீரகக் கற்கள் உருவாகாது என்கிறார் இவர்.
சிறுநீரகத்தைப் பாதுகாப்பதற்கு வழிகள்?



கண்ணாடி அணிவதைத் தடுக்க முடியும்!


முந்நூறு கிராம் நாட்டு நெல்லிக்காய்ப்பொடி, நூறு கிராம் சுக்குப் பொடி (இஞ்சி), இரண்டையும் நன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். இரண்டு பொடிகளையும் மூலிகை மருந்துக் கடைகளில் பெறலாம். தினமும் காலையும் மாலையும் ஒரு தேக்கரண்டி இந்தப் பொடியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் அருந்தி வரவும். இல்லையெனில் இரண்டு தேக்கரண்டி அளவு பொடி எடுத்து நான்கு டம்ளர் தண்ணிரில் கொதிக்க வைத்து, வடிகட்டித் தேன் சேர்த்தோ சேர்க்காமலோ அருந்தலாம். இது ஓர் உடல்நலம் காக்கும் அரிய பானம். குறிப்பாக, கண்ணாடி அணிந்திருப்பவர்கள் இந்த ஆரோக்கியப் பானத்தை அருந்தி வருவது நல்லது.
இத்துடன் தினமும் கேரட்டுகள் இரண்டு முறை, பாசிப்பருப்புப் பாயசம் ஒரு முறையும் அருந்தி வரவேண்டும். பச்சைப்பட்டாணியோ அல்லது கொண்டைக் கடலையோ தினமும் உணவில் சேரவேண்டும். ஆரோக்கிய பானம், கேரட் சாறு, பருப்பு கொண்டைக்கடலை மூலம் செரிமான சக்தி உடலில் மிகச் சரியாக நடைபெறுகின்றது. அப்போது இந்த உணவுகளின் மூலம் அதிகம் சேரும் வைட்டமின் ‘சி’யும், வைட்டமின் ‘ஏ’யும் உடலில் நன்கு கிரகிக்கப்படுவதால் மைனஸ் 3 முதல் 4 வரை லென்ஸ் அணிந்துள்ள கண்ணாடிக் காரர்கள் சில மாதங்களிலேயே கண்ணாடி இன்றி எளிதில் படிக்கலாம். கண்களில் அக்கு பிரஷர் சிகிச்சை செய்யும் முறையைக் கற்றுக்கொண்டால் எளிதில் படிக்கலாம். பார்வைத்திறன் மேலும் நன்கு அதிகரிக்கும்.




தங்கப்பானம் அருந்துங்கள்!


தங்கத்தாது உடலுக்கு நல்லது. 15 முதல் 30 கிராம் எடையுள்ள வளையல்கள், சங்கிலிகள் அழுக்கு, எண்ணெய்ப்பசை இல்லாமல் நன்கு கழுவிக் கொள்ளுங்கள். தங்கத்தின் எடை குறைந்தது 15 கிராம் இருக்க வேண்டும். இந்தத் தங்கத்தை நான்கு டம்ளர் தண்ணிரில் கொதிக்க வையுங்கள். மூன்று டம்ளராக குறைந்ததும் எடுத்து தர்மாஸ் ஃப்ளாஸ்க்கில் உற்றி வைத்துக்கொள்ளுங்கள். காலையில் இந்தத் தங்கப்பானத்தை ஒரு டம்ளர் அருந்துங்கள். மூச்சுக்குழல், நுரையீரல்கள், இதயம், மூளை முதலியவற்றிற்குச் சிறந்த டானிக் இது. இரத்தக் கொதிப்பு மூட்டுவலி, புற்றுநோய், இதய அடைப்பு முதலியவற்றை விரைந்து குணமாக்கும். தங்கத்தாது சேர்ந்த இந்தத் தண்ணீர் ஆறினாலும் 1/2 டம்ளர் வீதம் ஆறுநாட்கள் வரையில் இந்தத் தண்ணீரை அருந்தலாம். பிறகு மறுபடியும் தயாரித்துக் கொள்ளலாம்.
மன அழுத்தம், தோல்நோய், போலியோ, மூட்டுவலி, முதலியவற்றிற்கு 60 கிராம் செம்புத்தகடை நன்கு சுத்தம் செய்து இதே போல் 4 டம்ளர் தண்ணிரில் கொதிக்க வைத்து மூன்று டம்ளராக வற்றியவுடன் எடுத்து வைத்து அருந்தி வரவேண்டும். நரம்பு மண்டலத்திற்கான சத்துநீர் இது.
இந்த முறைகளைக் கண்டுபிடித்த மும்பை டாக்டர் தேவேந்திர டோரா ஜீரண உறுப்புகளையும் சிறுநீரகத்தையும் பலப்படுத்த முப்பது கிராம் வெள்ளித்தகடு ஆபரணத்தை இதே முறையில் வெந்நீரில் கொதிக்க வைத்து அருந்தச் சொல்கிறார். இந்த மூன்று தாது உப்புக்கள் சேர்ந்த இந்தத் தண்ணீர் குறிப்பிட்ட உறுப்புகளுடன் தொடர்பு கொண்டு பலப்படுத்திவிடும். இதனால் நோய் குணமாகி உறுப்புகளும் பலமாகி விடும்.
ஒருவருக்கு ஒரு பானமே போதும். ஆரோக்கியமாக உள்ளவர்களும், பெரிய பொறுப்புகளில் உள்ளவர்களும், எழுத்தாளர்களுக்கும் தங்கத்தாதுவில் பலப்படுத்தப்பட்ட தங்க நீர் மிகவும் நல்லது.




மருத்துவம் :

ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை 180 மில்லி தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும். ஆறியதும் கொஞ்சம் மிளகு தூள், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு முதலியன கலந்து அருந்தவும். தினமும் ஒரு வேளை அருந்தினால் போதும். ஆஸ்துமா கட்டுப்படும்.
ஆஸ்துமாவுக்கு ஒரு கப் சூப்!


கொலட்ஸ்ட்ராலுக்கு ஒரு கப்!

கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கிறது என்றால் கொத்துமல்லிக் காபி அருந்தவும். இல்லையேல் கொத்துமல்லியைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்தத் தண்ணீரை அருந்தவும். தினமும் ஒரு டம்ளர் போதும். இதனால் கொலஸ்ட்ராலும் குறையும். சிறுநீரகங்களும் சிறப்பாக வேலை செய்யும். குடிக்காரர்கள் இந்த முறையில் பயன்படுத்தினால் குடிபழக்கத்தின் மீதான நாட்டம் குறையும்.


மலட்டுத்தன்மையைக் குணமாக்கும் சூப்!

250 மில்லி பசும்பாலில் பதினைந்து கிராம் அளவு முருங்கைப் பூவைப்போட்டுக் காய்ச்சவும். முருங்கைப் பூவும் பாலும் கலந்த இந்த சூப்பைத் தினமும் ஒரு மாதம் கணவனும் மனைவியும் அருந்தி வந்தால் மலட்டுத்தன்மை இருவருக்கும் மறையும். இருவரும் மதியம் முருங்கைக்காய் சாப்பிட்டு வந்தாலும் இது தொடர்பான அனைத்து பலவீனங்களும் மறையும்.




கே.எஸ்.சுப்ரமணி

நலமான குழந்தை…



“கருவில் இருக்கும் குழந்தைக்கு
தாயின் மனநிலையே .. சேயின் மனநிலை”
என்கின்றனர் சித்தர்கள்.
தாயின் சிறிய அதிர்வு கூட குழந்தையைப் பாதிக்கும்.
புராண இதிகாசமான மகாபாரதத்தில் அர்சுனனின் மகன் அபிமன்யு தன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே கிருஷ்ண பரமாத்மா அவருக்கு உபதேசம் செய்ததாகவும், அந்த உபதேசங்களை அபிமன்யு கருவிலே கேட்டு அசைந்ததாகவும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இதிலிருந்து கருவிலே குழந்தையின் மனநிலை வளர்ச்சியடைகிறது என்பதை அறியலாம். அபிமன்யுவின் தாய் கிருஷ்ணனின் உபதேசத்தை நல்ல மனநிலையில் உட்கிரகித்ததால்தான் அபிமன்யு கருவிலே உபதேசம் பெற முடிந்தது.
நல்ல குழந்தைக்கு தாயின் மனநிலையே முக்கிய காரணமாகிறது.
தாய் உறங்கும் வேளையில் கூட கருவில் இருக்கும் குழந்தை வெளியுலக சஞ்சாரங்களை கிரகித்துக்கொள்கிறது. இதனாலேயே கருவுற்ற பெண்கள் நல்ல வார்த்தைகளையும், மெல்லிய இசையையும் கேட்க வேண்டும் என்றும் அமைதியான சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
சமீப பத்திரிக்கைச் செய்தி ஒன்றில் கருவிலே குழந்தையின் உடல் மட்டுமின்றி, மனநிலையும் வளர்ச்சியடைவதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறியிருப்பதை படித்திருப்பீர்கள்.
கருவிலிருந்து குழந்தைகளை நோயின்றி பாதுகாத்து வருவது நல்லது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற வழி முறைகளையும் தெளிவாகக் கூறியுள்ளனர். நோய் வந்தபின் அவஸ்தைப்படுவதைவிட நோய் வரும் முன் காப்பதே சிறந்ததாகும். இதனால்தான் சித்தர்கள் கருவுற்ற தாய்க்கு பல கஷாய மருந்துகளைக் கண்டறிந்து சொன்னார்கள். இந்த கஷாயங்களை கர்ப்ப காலத்தில் எந்த மாதத்திற்கு எந்த கஷாயம் அருந்த வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினர். பழங்காலத்துப் பெண்கள் இந்த கஷாயங்களை அருந்தி பல குழந்தைகளை அறுவை சிகிச்சையின்றி பெற்றெடுத்தனர்.
தாயின் மனநிலை உடல் நிலை இரண்டுமே குழந்தை வளர்ச்சிக்கு மிக முக்கியமானவையாகும். கருவுற்ற பெண்களை இதனால்தான் தாய் வீட்டிற்கு அனுப்புகிறார்கள். அங்கு அந்தப் பெண் ஒரு ராணி போல் தாயாரால் பராமரிக்கப்படுகிறாள். கருவுறும் காலத்திலிருந்து அந்த பெண்ணின் மனநிலை மகிழ்ச்சியுடனும் புத்துணர்வுடனும் இருந்தால்தான் குழந்தையை ஆரோக்கியத்துடன் பெற்றெடுக்க முடியும்.
கடந்த இதழில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது ஏன் என்று பார்த்தோம். இந்த வளைகாப்பின்போது அந்தப் பெண்ணுக்கு அனைவரும் வளையல் அணிவித்து சந்தனம் பூசும்போதும், உற்றார் உறவினர் வாழ்த்தும்போதும் அவளது மனம் ஆனந்தமடையும். அப்போது உடலானது புத்துணர்வுபெறும். இதனால் குழந்தை கருவில் நன்றாக வளரும்.
கருவுற்ற பெண்கள் மனதில் தயக்கம், பயம், ஏக்கம் எதுவுமின்றி இருக்க வேண்டும்.
வேலை காரணமாக நகரங்களுக்கு வந்து தனிக்குடித்தனம் செய்யும் பெண்கள் கருவுற்ற காலத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வது நல்லது. அப்போதுதான் அப்பெண்ணின் மனதில் தனக்கு போதிய பாதுகாப்பு இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்தான உணவும், தேவையான ஓய்வும் வேண்டும்.
ஆனால் நவீன உலகில் இதை ஒரு பொருட்டாக எண்ணாமல் தங்களின் பொருளாதாரத் தேவையை எண்ணியே அலைகின்றனர். இதனால் பெரும்பாலான பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பிறக்கச் செய்யும் நிலை ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க அவ்வப்போது சிறிது உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய வேண்டும்.
எப்போதும் மனதையும் உடலையும் சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம்

கடுக்காய் மரம் (Terminalia Chebula)

கடுக்காய்(Terminalia Chebula, Retz; Combretaceae)
திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் - பாடல் :

அணங்குமை பாக மாக
அடக்கிய ஆதிமூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும்
மருந்துநல் அருந்த வத்த
கணபுல்லர்க் கருள்கள் செய்து
காதலாம் அடியார்க் கென்றுங்
குணங்களைக் கொடுப்பர்
போலுங் குறுக்கைவீ ரட்டனாரே

கடுக்காய் புராணங்களிலும் வேதங்களிலும் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சராக்கா சம்ஹிதா, சுஸ்ரூதா சம்ஹிதா போன்ற சமஸ்கிருத நூல்களிலும் கூறப்பட்டுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட யுனானி மருத்துவ நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.

ஒருவர் தினசரி உணவுக்குப் பின் ஒரு கடுக்காயைக் கடித்து அதன் சாற்றை விழுங்கி வந்தால் எந்த நோயும் அவரை நெருங்காது என்று ஒரு பழமொழி கூறுகின்றது.

சிவபெருமானுக்கு வீரட்டீஸ்வரர் என்ற பெயர் வந்ததற்கு திருக்குறுக்கை ஊர் மக்கள் ஒரு புராணக் கதையைச் சொல்கிறார்கள்.

‘காமதேவன்’ என்பவன் கடுக்காய் விதையிலிருந்து மதுபானத்தை தயாரித்து குடிப்பானாம். அதைக் குடித்துவிட்டு மன்மத லீலைகளில் ஈடுபடுவானாம். அதனால் அந்தக் காமதேவனுக்கு மன்மதன் என்ற பெயரும் இருந்ததாம்.

சமஸ்கிருதத்தில் கடுக்காயை ஹரிதாக்கி என்றழைப்பார்கள். சிவபெருமானின் இன்னொரு பெயர் ஹரா என்பதாகும். சிவபெருமானின பேரைக் கொண்டே இம்மரம் விளங்குகிறது. கடுக்காய் மரம் இருக்கும் இடத்தில் சிவன் இருப்பதாக இந்து சமுதாய புராணங்கள் கூறுகின்றன.

கடுக்காய் மூன்று நிலைகளில் பறிக்கப்படுகின்றன. மாங்காய் பிஞ்சுகளைப் போல் விதை பிடிக்காமல் இருக்கும் நிலையில் பறித்து உலர வைக்கும் காயை ‘தான்றிக்காய்’ என்பார்கள். இது உலர்ந்த பின் கறுப்பாக இருக்கும்.

மரத்திலேயே விதை பிடித்து பழுத்து மஞ்சள் நிறமாக இருக்கும் போது பறிக்கப்படும் கடுக்காயை ‘மஞ்சள் கடுக்காய்’ என்றழைப்பார்கள். காய் பழுத்து முதிர்ந்து தானாக பூமியில் விழும் பழத்தை ‘காபூலி கடுக்காய்’ என்றழைப்பார்க்ள. மேற்கண்ட மூன்று விதமான கடுக்காய்க்கும் தனிதனியாக மருத்துவக் குணங்கள் அமைந்திருக்கின்றன.

தான்றிக்காய்
இதை வறுத்துப் பவுடராக்கி மூன்று கிராம் அளவில் சாப்பிட்டால் நாள்பட்ட பேதி குணமாகும். தான்றிக்காயை நெய்யில் ஊற வைத்து அதன் மீது கோதுமை மாவைப் பூசி மூடி விட வேண்டும். அதை நெருப்புக்குள் ஒரு மணி நேரம் வரை புதைத்து அதன் பின் அதை வெளியே எடுத்து மாவைச் சுத்தப்படுத்தி அதற்குள் இருக்கின்ற தான்றிக்காயை மட்டும் வெட்டிச் சிறிய துண்டுகளாக வைத்துக் கொள்ள வேண்டும். மேற்கண்ட கடுக்காயின் ஒரு துண்டும், கற்கண்டும் தாடையில் வைத்துக் சுவைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா, இளைப்பு, இருமல் ஆகியவை குணம்பெறும்.

கடுக்காய்
மஞ்சள் நிற முதிர்ந்த கடுக்காயைத் துடைத்து அதன் தோலை மருந்தாகப் பயன்படுத்துவார்கள். மலத்துவாரத்தில் எரிச்சல், அரிப்பு, வீக்கம், வலி, கட்டிகள், மருக்கள் குணமாகும். மலத்துவார மூலக்கட்டிகளைக் கடுக்காய் எண்ணெய் குணப்படுத்தும். நல்லெண்ணெயில் ரோஜாப்பூ இதழ்களைக் கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அந்த எண்ணெயை மீண்டும் அடுப்பில் ஏற்றி அது கொதிக்கும் போது தேன் மெழுகும், கடுக்காய்ப் பவுடரும் கலக்க வேண்டும். இது களிம்பாக மாறிவிடும். இதை மலத்துவாரத்திற்குள் பூசினால் மூலக்கட்டிகள் கரையும். மேலும் மலச்சிக்கல், மூலக் கட்டிகள் குணம்பெற மூன்று கிராம் கடுக்காய்த தூளை காலை மாலை இரண்டு வேளை தண்ணீருடன் வயிற்றுக்குள் சாப்பிட வேண்டும்.

தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் மூன்றையும் தனித்தனியாக வைத்துக் கொட்டையை நீக்கித் தோலை மட்டும் பவுடராக்கி 3 கிராம் முதல் 5 கிராம் வரை சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும். மண்டைச்சளி, மூக்கடைப்பு நீங்கும். புண்கள், காயங்கள், வீக்கங்கள், இரத்த மூலம், ஜலதோஷம், வாயு வலிகள், வயிற்றுச் சுரப்பிகளின் வீக்கம், கடுமையான ஜுரம், மதுப்பழக்கத்தினால் உண்டாகும் ஜன்னி போன்ற நோய்கள் குணமாகும். இப்பவுடரில் உப்பு கலந்து சாப்பிட்டால் இளமையில் நரைக்கும் தலைமுடி கறுப்பாகும்.

மஞ்சள் கடுக்காயைத் தோலை தண்ணீரில் அரைத்து இமைகளில் பூசினால் கண் நோய், எரிச்சல், உஷ்ணம் நீங்கும். கடுக்காய் மரப்பட்டையின் உட்பகுதியைப் பவுடராக்கித் தண்ணீரில் பிசைந்து விரைகளின் மீது பூசினால் ஹெர்னியா என்னும் குடல்வாத வலி நீங்கும்.

சித்த ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் கடுக்காயை ‘தாய்’ என்றே அழைப்பார்கள்.

தாய் பிள்ளையின் மீது கோபம் அடையலாம். ஆனால் தாய் உள்ளம் படைத்த கடுக்காய் எப்போதும் கோபம் அடையாது என்று அவர்கள் கூறுவார்கள்.

கடுக்காய்த் தோலைப் பவுடராக்கி 3 கிராம் அளவில் தினமும் சாப்பிட்டு வந்தால் முதல் மாதம் பலவீனம் நீங்கும். 2வது மாதம் கண்பார்வை உண்டாகும். வியாதிகள் நீங்கும். 3வது மாதம் கண்பார்வை அதிகரிக்கும். 4வது மாதம் இதய பலவீனம் நீங்கும். 5வது மாதம் நரைமுடி கருப்பாகும். 6வது மாதம் இந்திரியக்கசிவு, இந்திரியஸ்கலிதம் நோய் குணம்பெறும். 7வது மாதம் ஆண்மை சக்தி அதிகரிக்கும். 8வது மாதம் ஞாபக சக்தி அதிகரிக்கும். 9வது மாதம் ஐம்புலன்கள் வலுவடையும். 10வது மாதம் கூர்மையான புத்தி உண்டாகும். 11வது மாதம் உடலும், உள்ளமும் சந்தோஷம் அடையும். இதைத்
தேனில் கலந்து சாப்பிடலாம்.

60 கிராம் கடுக்காய்த் தோலைப் பவுடராக்கி 120 கிராம் கருப்பு வெல்லத்தில் கலந்து 6 கிராம் எடை கொண்ட மாத்திரைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். இதைக் காலை, மாலை இரண்டு வேளை வெந்நீருடன் அல்லது மோருடன் சாப்பிட்டால் இரத்தம் கொட்டும் மூலம், இரத்தம் கொட்டாத மூலம் குணம்பெறும்.

கடுக்காய்த்தூள் 25 கிராம், யானைத் திப்பிலி 25 கிராம், பெருங்கடுக்காய் 80 கிராம், விதைகளை அகற்றி சுத்தமாக்கப்பட்ட கிஷ்மிஷ் பழம் 50 கிராம் அனைத்தையும் இடித்து ஒரு கிராம் எடை கொண்ட மாத்திரைகளாகத் தயார் செய்து கொள்ள வேண்டும். இதைத் தினமும் மூன்று வேளை வெந்நீருடன் சாப்பிட்டால் வாயுக்கோளாறு, பசியின்மை, ஜீரணக் கோளாறுகள் குணம் பெறும்.

80 கிராம் வாசலைனில் 10 கிராம் கடுக்காய் பவுடரைக் கலந்து களிம்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தீச்சுட்ட புண் மற்றும் இதர புண்களைக் குணமாக்க இதைப் பூசலாம்.

விஞ்ஞான ஆய்வு
கடுக்காயில் டேனின், மைரோ பெவினின், ராவ்ஜேபோவோனிக் ஆசிட் மற்றும் எண்ணெய் வஸ்துக்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடைகளில் கிடைக்கும் யுனானி மருந்துகள்
இத்ரஃபீல் உஸ்துகுத்தூஸ் லேகியம் : மண்டைச்சளி, சைனஸ், நாள்பட்ட தலைவலி இவற்றைக் குணமாக்கும்.

இத்ரஃபீல் ஷஹத்ரா லேகியம் : தோல் வியாதிகளைக் குணமாக்கும். இரத்தத்தைச் சுத்தமாக்கும். காதிலிருந்து சீழ் வடிவதைக் குணமாக்கும். வெட்டை நோயை நீக்கும்.

இத்ரஃபீல் கிஷ்ணிஜி லேகியம் : காது, மூக்கு, தொண்டைக் கோளாறுகள் நீக்கும்.

இத்ரஃபீல் முலையன் : மலச்சிக்கலை நீக்கும்.

இத்ரஃபீல் மக்வி தமாக் : மூளை வளர்ச்சி, ஞாபக மறதி பிரச்சினைகளைக் குணமாக்கும்.

இத்ரஃபீல் ஜமானி : கண் பார்வையைக் கூர்மையாக்கும்

இத்ரஃபீல் அஃப்தி மூன் : சந்தேகம், மனநோய், மூளைக் கோளாறுகள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட்டால் நரைமுடி கறுப்பாகும்.

இத்ரஃபீல் தீதான் : 10 கிராம் லேகியத்தை தினமும் 4 வேளை இரவில் படுக்கும் போது தொடர்ந்து 4 நாட்கள் சாப்பிட்ட பின் பேதியை உண்டாக்கும். மாத்திரையைக் காலையில் ஒருவேளை சாப்பிட்டால் நாக்குப்பூச்சி அனைத்தும் வெளியேறிவிடும்.

இத்ரஃபீல் சனாயி : நாள்பட்ட மலச்சிக்கல், மனநோய், நாள்பட்ட ஒற்றைத் தலைவலி குணம்பெறும்.

இத்ரஃபீல் ஸகீர் : மூலம், தலைவலி நீங்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

இத்ரஃபீல் குதாதி லேகியம் : தைராய்டு, கண்டமாலை பிரச்சினைகள் நீங்கும்.

ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)

மையின் வேறு பெயராக பாங்கர், உகா என அழைக்கப்படுகிறது. இது இந்தியா, இலங்கையில் பயிராகும் மர வகுப்பினைச் சேர்ந்தது.

இதன் இலை, பட்டை, பழம், விதை ஆகியவை மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இலையும், பட்டையும் துவர்ப்புத் சுவையுடன், வெப்பத்தன்மை கொண்டது. இதன் பழம் இனிப்புச் சுவையும், மலமிளக்கும் தன்மையும் கொண்டது. இதன் சாற்றைப் பிழிந்து சிறிது சர்க்கரையும், தண்ணீரும் சேர்த்துச் சாப்பிட இருமலைத் தணிக்கும். குளிர்ச்சி தரும். இச்சாற்றை அளவுடன் கொடுத்தால் பேதி உண்டாகும்.

விதை : முக்குற்ற நோய்களைப் போக்கும். இதனைப் பொடியாகச் செய்து மருந்தாகத் தருவர்.

உவா (ELEPHANT APPLE)
இம்மரம் ஒரு அழகு வாய்ந்த மரமாகும். இதன் பாகங்கள் அனைத்து உபயோகங்களுக்கும் ஏற்றது. சாப்பிடுவதற்கு ஏற்ற கனி தருகிறது. உடல் வெப்பத்தைத் தணித்து நரம்பு மண்டலத்தைச் சீர்படுத்தி, களைப்பை நீக்கிவிடும். சக்தி தரும் பழரசம், பட்டுப்புழு வளர்ப்புக்காகத் தழையைத் தருகிறது.

வால்மீகி முனிவரைக் கவர்ந்த இப்பழம் ‘பாவ்யா’, எனவும் ‘சரித்திரா’ எனவும் குறிப்பிட்டு எழுதியுள்ளார். தாவர அறிவியல் பொய் ‘டில்லனியா இண்டிகா, (DILLENIA INDICA .L) என்பதாகும். ‘டில்லனியேசி’ என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்து விளங்குகிறத. இம்மரம் இந்தியாவில் அதிகமாகக் காணப்படுவதால் ‘இண்டிகா’ என்ற இணைப்புப் பெயர் ஏற்பட்டுள்ளது.

அதிகமாக வெப்பப்பகுதிகளில் வளரும் இம்மரம் ஈரச்சூழல்மிக்க காடுகளிலும், ஓடைகள், ஆறுகளின் கரைகளிலும் காணலாம். மேற்கு தொடர்ச்சி மலை, தென் கர்நாடகத்துக்குத் தெற்கே அதிகமாகத் தென்படுகிறது. யானைகள் விரும்பி இதன் பழங்களை உண்ணும். பின்னர், இவ்விதைகளை காடுகளில் பரப்பிடும். மேலும், நீரில் மிதப்பதன் மூலம் பழங்கள் ஏனைய இடங்களிலும் பரந்துபட்டு முளைக்கும். சென்னையிலும் இம்மரம் உள்ளது.

செங்குத்தாக வளர்ந்து, நிறைய தழைகளுடன் வளரும் இம்மரம் சுமார் 10 முதல் 12 மீட்டர் வரை வளர்கிறது. கிளைகளின் நுனியில் பெரிய வெள்ளைப் பூக்கள் காணப்படும். நல்ல வாசனை கொண்டது. ஜுன், ஜுலை மாதங்களில்தான் பூக்கும்.

பொதுவான பயன்கள்
‘தாவர உலகில் மிகப் பிரமாதமாக காட்சியளிக்கும் பூக்களையும், காய்களையும் கொண்டது’ டில்லனியா என்பது தாவர இயலார் கூறும் அற்புதச் செய்தி.

பழம் : இதனைச் சமைத்தும் சாப்பிடலாம். ஊறுகாயாகவும் செய்து சாப்பிடலாம். கனியில் புளிப்புத் தன்மை உள்ளது. இதனைப் பானமாகவும், ஜெல்லி போன்றும் தயாரித்து வைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பூக்கள் : வடகிழக்கில் வாழும் ஆதிவாசிகள் இப் பூக்களைச் சமைத்து உண்கின்றனர்.

இலை : கால்நடைகளுக்குத் தீவனமாகிறது.

மரம் : உறுதியானது, நீரில் நீடித்து உழைக்கக்கூடியது. துப்பாக்கிக் கட்டைகள், கட்டிட வேலைகள், கடைசல் பணிகள், எட்டுப் பலகைகள் செய்ய ஏற்றது.

சித்த மருத்துவப் பயன்கள்
பழம் : ஆயுர்வேதத்தில் இதற்கு நல்ல பண்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது உடல் வெப்ப நிலையைச் சீர்படுத்தவும், நரம்பு மண்டலத்தைச் சீராக்கவும், களைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

* அஸ்ஸாமில் உள்ள ஒரு பகுதியில் ஆதிவாசிகள் மெலிந்தவர்களுக்கு ரசமாக்கிக் தருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

* காய்ச்சல், இருமல் உள்ளவர்க்கு பழச்சாறுடன் தண்ணீரையும், சர்க்கரைையுயம் கலந்து கொடுப்பது உண்டு. மலமிளக்கும் தன்மையும், அதிகமாகச் சாப்பிட்டால் பெரும் பேதியை உண்டாக்கும் குணமும் உள்ளது.

பட்டை : பட்டையை நசுக்கி, மூட்டு வலிகளுக்கு வைத்துக் கட்டலாம்.

* இது கொஞ்சம் சூடுள்ளது என்றும் உலர்ந்ததனால் கார்ப்புள்ளதாக இருக்கும் என்றும், காய்ச்சல்காரர்களுக்கு நோய் நீங்கிட கஷாயம் போட்டுக் கொடுப்பார்கள்.

இதன் பச்சை வேர்ப்பட்டையை இடித்துக் கட்டினால் கொப்புளம் போக்கும் மருந்தாக உபயோகப்படுகிறது. கொஞ்சம் வாசனையும், ருசி உள்ளதாகவும் இருக்கும்.

தழை : அண்மையில் இலைகளிலிருந்து ஆல்கஹாலில் கரையும் சத்தை சுண்டெலிகளில் செலுத்தி ஆராய்ச்சி செய்த பொழுது, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் சத்து ஒன்று இருப்பதாக அறிந்துள்ளனர்.

உபதொழில் உபயோகம்
டஸ்ஸார் இன பட்டுப் புழுவும், அட்லாஸ் இன பட்டுப்புழுவும் இதன் இலையை நன்றாகச் சாப்பிட்டு வளரும். இதன் மூலம் பட்டு நூல் பெறலாம்.

பிறசெய்திகள்
தோட்டங்களில் காற்றுத் தடுப்பு மரமாகவும், நகரங்களில் பெரிய அலுவலக வளாகங்களில், வீடுகளில் அழகுக்காகவும் வளர்க்கலாம்.

இதில் மற்றொரு இனம் உள்ளது. அதை ‘டில்லினியா பெண்டா கைனா’ (DILLENIA PENTAGANA ROXB) என அழைப்பர். இதன் இலைகள் சுமார் 1 மீட்டர் வரை இருக்கும். ஆனால் பழமும், பூவும் சிறியது. மரத்தின் வடிவம் மட்டும் பெரியது. இங்கு கூறியுள்ள உவா மரத்தின் பயன்கள் அனைத்தும் இதற்குப் பொருந்தும்.

மற்றும் இதன் இலைகளை கூரை அமைக்கவும் உபயோகப்படுத்துகின்றனர். உப்புத்தாளாகவும், மரத்திலிருந்து ஒருவகை நாரும் எடுக்கின்றனர். ஒரு கிலோ எடையில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதைகள் உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.

தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்
ஒமாம்புலியூர் சிவன் கோயில் தலவிருட்சமாக ஒமை எனப்படும் உகாமரம் வணங்கப்படுகிறது.

சங்க இலக்கியம்
குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்றுள்ள ‘பாங்கர்’ என்பதற்கு ‘ஒமை’ என்று உரை கூறிய நச்சினார்க்கினியர், கலித்தொகையில் வரும் ‘பாங்கர்’ என்பதற்குப் ‘பாங்க் கொடி’ என்று உரை வகுத்தார். பாங்கர் என்ற பாலை நிலத்து மரத்துக்கு ‘ஒமை’ என்றும், பாங்கர் என்ற பெயரில் ஒரு கொடியும் (முல்லைக் கொடியுடன் இணைத்து பேசப்படுவது) உண்டு என்றும் எண்ண இடமுள்ளது.

‘பாங்கர் மரா அம் பல்பூந் தணக்கம்’ என்று குறிஞ்சிப் பாட்டில் கபிலர் குறிப்பிட்டடுள்ளார். இதற்கு ‘உவா’ என்று பெயர் என “காம்பிள்” குறிப்பிட்டுள்ளார். ஆனால், கலைக்களஞ்சியம் இதனை ‘உகா’ என்று கூறுகிறது.

இம்மரங்கள் வறண்ட பாலை நிலங்களில் காடுபோல வளரும். இதன் அடிமரத்தை ‘புன்தாள்’, ‘பொரிதாள்’, ‘முடத்தாள்’ எனவும் குறிப்பிடுகின்றனர். இதன் பட்டையை உரித்து யானைகள் உண்ணும் எனவும் அறியப்பட்டுள்ளது.

“குல்லையும், குருந்தும் கோடலும் பாங்கரும்
கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர்” என கலித்தொகையில் குறித்துள்ளனர். அதாவது, இதன் மலரைக் குல்லை, குருந்து, கோடல் முதலிய மலைப்புற மலர்களுடன் சேர்த்துக் கட்டி, கண்ணியாக அணிந்து கொள்வர் என்று கூறப்பட்டுள்ளது.

இம்மரத்தைக் கோயில் தோட்டங்களில் வளர்ப்பார்கள் எனவும் சங்க இலக்கியக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் - பாடல் :
நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை
மேலா னாஞ்செய்த வல்லினை வீடுமே.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் குளித்தலையில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோயில் கதம்பமரம் தெய்வீக மரமாக வணங்கப்படுகிறது.

சிவபெருமான் மற்றும் முருகப் பெருமானுக்கு கதம்பா மரம் உகந்த மரமாகக் கருதப்படுகிறது. இது தவிர புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்த மரத்தை மிகவும் போற்றுகிறார்கள்.

ஜைன மத முனிவர் வாசு பூஜ்யா கதம்பா மரத்தின் அடியில் ஞானம் பெற்றதாக ஜைன மதத்தவர்கள் நம்புகின்றார்கள்.

இந்த மரத்துப் பூக்களை முருகப்பெருமான் ஆபரணமாக அணிந்து கொண்டதாக “திருமுருகாற்றுப்படையில்” சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் முருகனை வழிபடும் பக்தர்கள் கதம்பப்பூக்களைக் கொண்டு பூஜை செய்கின்றனர்.

இது போலவே, விஷ்ணு புராணத்திலும் கதம்ப மரத்தைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணனுக்கும் இந்த மலர் மிகவும் பிடிக்கும். இந்துக்களின் தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்த மலைச் சிகரங்களில் ஒன்றான கோமந்தா சிகரத்தில், கதம்ப மரம் மிக அதிகளவில் காணப்படுகிறது.

கதம்பா மூலிகை இமயமலை அடிவாரங்களில், குறிப்பாக, நேபாளத்தின் கிழக்குப் பகுதி முதல் பர்மா வரையிலுள்ள பகுதிகளில் நன்றாக வளர்கின்றது. மேலும், இது தென்னகப் பகுதிகளில் ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைக்குன்றுப் பகுதிகளிலும் இவை மிக நன்றாக விளைகின்றது.

ஆயுர்வேதம்
இந்த மூலிகை ஆண்மைக் கோளாறுகளைப் போக்கி, நலப்படுத்த மிகவும் உதவுகிறது. இந்திரியத்தை அதிகளவில் உற்பத்தி செய்வதுடன், உடலுறவில் கூடுதல் இன்பத்தைத் தருவதிலும், பிறப்புறுப்புக் குறைபாடுகளுக்கும் இவை மிகவும் நன்மை பயக்கிறது.

பெண்களின் பிறப்புறுப்பு நோய்கள், சிறுநீர் பிரிவதில் ஏற்படும் சிக்கல், இரத்தசோகை, தோல்நோய்களுக்கு இது மிகவும் பயன்படுகிறது.

இரத்தச்சிதைவு, விஷத்தன்மைகளுக்கு எதிரான தன்மைகளைத் தோற்றுவிப்பதால் இது மிகவும் உதவுகிறது.

இதன் பழத்தைச் சாறு பிழிந்து, அதனைச் சீரகம், சர்க்கரையுடன் கலந்து சிறுவர்களுக்குக் கொடுத்தால் அவர்களின் ஜீரண மண்டலம் சீராகச் செயல்பட உதவும். இந்த மூலிகை, இரத்தத்தைச் சுத்தப்படுத்தி அசுத்தங்களை வெளியேற்றவும் மிகவும் உதவுகிறது.

இந்த மூலிகையின் இலைகளைக் கஷாயமிட்டு, அதனைக் கொண்டு வாய் கொப்பளித்தால், வயிற்றுப் பிரச்னைகள், ஜீரண மண்டல குறைபாடுகள் குணமடைந்து நலன் ஏற்படும். மேலும், இது சிறுநீரை சீராக வெளியேற்றுவதுடன், சிறுநீர் பிரிவதில் ஏற்படும் குறைபாடுகளையும் சீர்ப்படுத்துகிறது.

பயன்படும் உறுப்புகள்
இந்த மூலிகையின் தண்டுப்பகுதி, பழங்கள், பூக்கள் ஆகியவை மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.

அளவு : இந்த மூலிகையைக் கஷாயமிட்டு, 50 முதல் 100 மில்லி வரையில் மருந்தாகத் தரலாம்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
திருக்கடம்பத்துறை (குளித்தலை - கடம்பர் கோயில்), திருகடம்பூர் திருஆலவாய், (கடம்பாவனம் - மதுரை) ஆகிய திருக்கோவில்களில் கடம்ப மரம் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. இத்திருக்கோவில்கள் சார்ந்த ஊரும் மரத்தின் பெயரால் மரம் தலவிருட்சமாக அமைந்து உள்ளது சிறப்பாகும்.

திருக்கடம்பூர் (PINCODE - 639104) என்னும் ஊர் ஓமாம்புலியூருக்கு வடமேற்கில் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இவ்வூருக்கு மேலைக் கடம்பூர் என்றும் பெயர் உள்ளது. இங்கு அமுதகடேசுவரர், சோதிமின்னம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கடம்பு மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் கடம்பு மரத்தையும் சேர்த்து வணங்ஙகுகிறார்கள். திருக்கடம்பத்துறை (பின்கோடு - 639 104) எனும் ஊர் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 31 கி.மீ. தூரத்திலும், குளித்தலைக்கு வடிமேற்கே 2 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இவ்வூர் கடம்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு கடம்பவனநாதர், முற்றிலா முலையம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கடம்ப மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் கடம்ப மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

திருஆலவாய் (PIN CODE - 625 001) என்னும் ஊர் சோமசுந்தரக்கடவுள் 64 திருவிளையாடல்களை நடத்தியதில் இடம் பிடித்து உள்ளது. இவ்வூர் மதுரை என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு சொக்கநாதர், மீனாட்சி அம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கடம்பு மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் கடம்ப மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

அத்தீச்சுரம் (PINCODE - 627 412) என்னும் ஊர் ஆழ்வார் குறிச்சியிலிருந்து கடனாநதி அணைக்குப்போகும் நகரப் பேருந்தில் கல்யாணிபுரி நிறுத்தத்தில் இறங்கி சிறிது தூரத்தில் உள்ளது. இவ்வூர் சிவசைலம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு சைவநாத சுவாமி, அத்ரீசுவரர், சிவசைவநாதர், பரமகல்யாணி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கடம்ப மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் கடம்ப மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

சங்க இலக்கியம்
கபிலர் குறிஞ்சிப்பாட்டில் “பாங்கர் மரா அம்பல் பூந்தணக்கம் என்றார். “மரா அம்” என்ற இச்சொல் சங்க இலக்கியங்களில் எல்லாம் அளபெடை பெற்றே வருவது இதன் சிறப்பியல்பு.

சங்க இலக்கியப் பெயராக மரா அம் எனவும், அதன் வேறு பெயர்களாக மரவம், மரா, கள்ளி, கடம்பு எனவும், பிற்கால இலக்கியப் பெயராக கடம்பை, மராமரம் எனவும் உலக வழக்குப் பெயராக வெண்கடம்பு, வெள்ளைக் கடம்பு எனவும் கூறுவர். ஆங்கிலப் பெயராக “ஆன்தோ செஃபாலஸ் கடம்பா’ எனவும் குறிக்கப்படுகிறது.

உறுதி மிக்க பெரிய மரம். இது ஆலமரத்துடன் சேர்த்து பேசப்படுகிறது. ‘பூ’ வெண்ணிறமானது. கொத்தாகப் பூப்பது, சுண்ணாம்பு போன்ற வெண்ணிறமானது. இதன் வெண்மை ஒளியைக் கதிரவன் ஒளியோடு பொருத்தினார் கல்லாடனார். தண்ணீர் தாகம் எடுத்துக் கொண்ட ஒரு யானை, மலைப் பகுதியில் மராமரத்து மலர் உதிர்வதை வெள்ளிய மழைத் துளிவிழுவதாக எண்ணி அங்குமிங்கும் ஓடி அலைந்தது என்பர்.

தெய்வங்களின் நிறத்தோடு மலர்களை அறிமுகம் செய்யும் கலித்தொகை. ஒரு காதணி கொண்டவனும் வெள்ளை நிறத்தவனும் வலிய நாஞ்சில் படையைக் கொண்டவனுமாகிய பலராமன் பசிய துளசி மாலை அணிந்திருப்பது போன்று மாமரத்தின் அகன்ற உயர்ந்த கிளைகளில் பசிய மயில்கள் சூழ்ந்திருக்கும் என்றும் கூறுகிறது.

பலராமன் மார்பில் அணிந்துள்ள வெண்மையான மரா மலர்த்தார் அருவி போன்றிருந்தது என்று கூறுவர் இளம் பெருவழுதியார். இம் மரத்தடியில் பலர் கூடும் மன்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மரத்தின் அடியிடத்தில் போரில் புறங்கொடாது மாய்ந்த வீரரது நடுகல் நாட்டப்பட்டுள்ளது. இம்மரத்தின் சிறு தெய்வம் இடம் பெறுவதாகவும், இத்தெய்வம் கொடியேரைத் தெறுமென்றும் நம்பினர்.

“மன்ற மரா அத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப” என குறுந்தொகை குறிப்பிடுகிறது. சங்க இலக்கிய நூல்களில் இதுபற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.


யுனானி மருத்துவத்தில் களாமரத்தின் மருத்துவ குணங்கள்
தோற்றம் : இது ஒரு முட்களுடைய மரத்தின் பழமாகும். திராட்சையைப் போன்றிருக்கும். பழுத்தபின் இனிப்பாக இருக்கும். சிவப்பு நிறமாக மாறிவிடும். இதனுள் 2 அல்லது 3 விதைகள் இருக்கும். இவ்விதைகள் வெண்மை நிறத்தில் அகன்றிருக்கும். மல்லிகையைப் போல வாசனையுடைய மலர்கள், கிளைகளின் முனைகளில் சிவப்புநிற இலைகள் பூக்கள் போலவே காணப்படும்.

பச்சை வண்ண இலைகள் பளபளப்புடன் காணப்படும். பவழநிறத்தில் காய்களும், இவை முற்றிய நிலையில் கறுப்பாகவும் இருக்கும். கண் கவரும் குறுமரம். கண்களுக்கு மருந்துதரும் கனிகள். சாப்பாட்டுக்கு சுவையூட்டும் ஊறுகாய் முதலியவை தரும் மரமே களா மரமாகும்.

காரிசா கராண்டஸ் (CARISSA CARANDAS L.) எனும் அறிவியல் பெயர் கொண்டு “அப்போசைனேசி” என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மரமாகும்.
வறட்சியான முட்புதர் காடுகளிலே நிறைய காணப்படும் மரம். புதராக வளர்ந்திருக்கும் மணல் மற்றும் பாறைப் பகுதிகளில் காணலாம். சுமார் 5 மீட்டர் உயரம வரை வளரக் கூடியது. ஆண்டு முழுவதும் பூத்தாலும் மார்ச்சு, ஏப்ரலில் அதிகம் பூக்கும்.

இயல்பு : குளிர்ச்சி, ஈரம் கொண்டது.

முக்கிய குணங்கள் : இதன் காய் மலச்சிக்கலை நீக்கும். வயிற்று வேக்காடு மற்றும் அழற்சியை நீக்குவதுடன் சக்தியையும் தருகிறது. இதன் பழமும் மலச்சிக்கலை நீக்குகிறது. பித்தக் கொதிப்பு மற்றும் தாகத்தைத் தணிக்கிறது. வயிற்று வேக்காட்டைத் தணித்து சக்தியைத் தருகிறது.

பயன்படுத்தும் முறை : இதன் காயுடன் உப்பு சேர்த்து தின்பண்டமாகவும் மற்றும் ஊறுகாய் தயாரித்து உணவிலும் சேர்த்துக் கொள்வார்கள். பித்தம் மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது மிகவும் சிறந்ததாகும்.

மேலும் வயிற்றுக்குச் சக்தியளிக்கிறது. இதன் பழத்தைச் சாப்பிடுவதால் பித்தம் மற்றும் தாகம் தணிகிறது. அதிக பசியை உண்டாக்குகிறது. பித்தத்தால் உண்டாகும் பேதியைக் கட்டுப்படுத்துகிறது.

முக்கிய குணங்கள் : வாயுத் தொல்லையை அகற்றும். அதிகப் பசியை உண்டாக்கும்.

தீய விளைவுகள் : வயிற்றை உப்புசம் அடைய செய்கிறது. மெதுவாக ஜீரணிக்கும் தன்மையுடையது. மற்றும் ஆண்மைக்குத் தீங்கு விளைவிக்கும்.

தீய விளைவுகளைச் சரி செய்யும் முறை : இத்துடன் உப்பு, சர்க்கரை மற்றும் மிளகு கலந்து பயன்படுத்த வேண்டும்.

பழம் : பழுத்த பழங்கள் பசியை அதிகரிக்கின்றது.

* பித்தத்தைக் குறைக்கிறது.
* தாகத்தைத் தணிக்கிறது.
* பேதியைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக பித்தம் அதிகரிப்பதால் உண்டாகும் பேதியைக் கட்டுப்படுத்த வல்லது.

காய் : காயைச் சாப்பிட்டால் அஜீரணத்தை ஏற்படுத்தி சளியை உண்டாக்குகிறது.

காயை ஊறுகாயாகத் தயார் செய்து சாப்பிட்டால் பசியை அதிகரிக்கிறது. ஆனால் ஆண்மை சக்தியை பலவீனப்படுத்திவிடுகிறது.

இலைகள் : காட்டு களா மரத்தின் இலைகள் 6 கிராம் எடுத்து அரைத்து தயிரில் கலந்து குடிக்க வைக்கவும். இதேபோல் தினசரி தயாரித்து 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால் காக்கை வலிப்பு நோய் குணம்பெற்றுவிடும். இளைஞர்கள் 12 கிராம் இலைகள் வரை அரைத்து தயிரில் கலந்து சாப்பிடலாம்.

உலர்ந்த களாவை தண்ணீரில் ஊற வைத்தால் இதில் காயின் மருத்துவ குணங்கள் உண்டாகிவிடுகின்றன. உஷ்ணத்தால் ஏற்படும் சொட்டு மூத்திரம் இதனால் குணம்பெறுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கிறது. இதை அரைத்து பூசினால் ஈக்கள் உட்காருவதில்லை. இதை சட்னி அல்லது காய்கறியுடன் சமைத்து சாப்பிடுவதால் ஈறுகளின் நோய்கள் குணம் பெறுகின்றன.

களாக்காயின் பால் தோலின்மீது படும்போது சிலருக்கு கொப்புளம் உண்டாகிவிடும். ஜுரம் உண்டாகும். அந்நேரத்தில் களா இலைகளைக் கஷாயம் செய்து குடித்தால் முறிவு ஏற்பட்டு ஜுரம் நீங்கிவிடும்.

இலைகளை இடித்து அதன் சாற்றை தேனில் கலந்து குடிப்பதால் வறண்ட இருமல் குணம்பெறுகிறது. முதல்நாள் காலையில் களா இலைகளின் சாறு குடிக்க வைக்கவும். அடுத்த நாள் 12 கிராம். இப்படி 10 நாட்களில் 120 கிராம் வரை 10 மடங்கு அளவில் தினசரி அதிகரித்துக் கொண்டே போகவும். இப்படி காலையில் குடிக்க வைப்பதால் கிட்னி ஃபெயிலியர் நோய் (DROPSY) மற்றும் சிறுநீரக, கல்லீரல் நோய்கள் குணம்பெறுகின்றன என்று யுனானி மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இதன் இலைகள் பித்தத்தை அதிகரிக்கின்றன. இம்மரப்பட்டையை கஷாயம் இட்டு குடித்தால் சிறுநீர் தாராளமாகப் பிரிகிறது.

களா விதைகளை எண்ணெயில் கொதிக்க வைத்து அந்த எண்ணெயைப் பூசினால் கால் பாதங்கள், உள்ளங்கை வெடிப்பை குணமாக்குகின்றன. அதிகமாக சாப்பிடுவதால் நுரையீரலுக்கும், இந்திரியத்திலும் கோளாறுகள் ஏற்படும். இதைத் தடுக்க முறிவு மருந்தாக உப்பு, வெல்லம், இஞ்சி சேர்த்து பயன்படுத்தலாம்.

சித்த மருத்துவத்தில் களாமரத்தின் மருத்துவ குணங்கள்
பூக்கள் : கண்களில் ஏற்படும் நோய்களுக்கு இதன் பூக்களை நன்றாகக் கசக்கி தினசரி காலை வேளையில் 3 துளிகள் விட்டு வந்தால் குணம்பெறும் மையில் களாப்பூ சேர்க்கப்படுகிறது.

காய் : சாப்பாட்டை ஜீரணிக்க உதவுகிறது. பசியை உண்டாக்குகிறது.

பழம் : இதனைச் சாப்பிட்டால் இரைப்பை வலிமை பெறுகிறது. உடம்பு சூடு தணிகிறது. ஆண்மை அதிகரிக்கிறது. அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் உண்டாக்கும். இதில் வைட்டமின் ‘சி’ சத்து உள்ளதால் சொறி, கரப்பான் வராமல் தடுக்கிறது.

விதை : விதையில் இருந்து எண்ணெய் எடுத்து சொறிக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

வேர் : குழந்தை பிறந்ததும் அழுக்கு, சூடு ஆகியவற்றைப் போக்கிவிடும் மருந்தாக உபயோகப்படுத்துகின்றனர். நாக்கு பூச்சிகளுக்கும், வயிற்று நோய்களுக்கும் மருந்தாகிறது.

தழை : விட்டு விட்டு ஏற்படும் காய்ச்சலுக்கு இதிலிருந்து எடுக்கப்படும் கஷாயம் மருந்தாகிறது.

* காயுடன், இஞ்சியைச் சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன் சாப்பிட்டால், பசியின்மை, சுவை தெரியாமை, இரத்தத்தில் உள்ள பித்தம், அடங்காத தாகம், பித்தக் குமட்டல் ஆகியவை போகும்.

* வேரை உலரவைத்து பொடியாகச் செய்து சம அளவு சர்க்கரை கலந்து 3 கிராம் அளவு இருவேளை சாப்பிட்டு வந்தால் தாகம், அதிக வியர்வை தீரும்.

* இப்பழத்தை உணவு சாப்பிட்டபின் சாப்பிட்டால் விரைவில் ஜீரணம் ஆக்கும்.

* சுத்தமான பூவை நல்லெண்ணெயில் இட்டு பூ மிதக்கும் வரை வெயிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டு துளிகள் தினமும் கண்களில் விட்டு வந்தால் கண்ணில் உள்ள வெண் படலம், கரும்படலம், இரத்தப் படலம், சதைப் படலம் தீரும்.

* 50 கிராம் அளவு வேரை நசுக்கி 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு 5-ல் ஒரு பங்காக ஆகும் அளவு காய்ச்சி வடிகட்டி 2 வேளை 50 மி.லி. அளவு கொடுத்து வந்தால் பிள்ளைப்பேற்றின் போது ஏற்படும் கருப்பை அழுக்குகள் வெளிப்படும்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்

கரியல் பால்வண்ணநாதர் ஆலயம், பொதிகை மலை (பாபநாசம்) பாபநாசர், பாபவிநாசர் ஆலயம் ஆகியவற்றில் களாமரத்தைத் தெய்வமாக வணங்குகிறார்கள்.

பொதிகை மலை (PINCODE-627 425)க்கு திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய ஊர்களிலிருந்து வரலாம். இவ்வூர் பாபநாசம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு பாபநாசர், பாப விநாசகர், லோக நாயகி, உலகம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் களா மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் களா மரத்தையும் சேர்த்து வணங்குகிறார்கள். இதேபோல் பாபநாசம் என்னும் பொதிகை மலையில் பாபநாசர், பாப விநாசகர், லோகநாயகி, உலகம்மை தெய்வச்சிலைகள் கொண்ட பெரிய கோவில் ஒன்று இருக்கின்றது. இக்கோவிலின் தலவிருட்சம் களா மரமாகும். இக்கோவிலில் சிவபெருமான் கல்யாண சுந்தரராக அகத்திய முனிவருக்கும் லோபா முத்திரைக்கும் திருமணக் கோலம் காட்டிய புண்ணிய தலமாகும்.

திருநெல்வேலி, தென்காசி, அம்பா சமுத்திரம் ஊர் மக்கள் இங்கு அதிகளவில் இறைவனை தரிசிக்க வருகின்றார்கள். இங்கு அகத்தியர் கோவிலும், அகத்தியர் நீர் வீழ்ச்சியும் உள்ளது. இங்கிருக்கும் நடராஜரை அனுகு சபாபதி என்று அழைக்கின்றார்கள். இது திருவாசகத்தில் இடம் பெற்ற மிகப் பழமையான கோயிலாகும்.

மேக்கப்… ரசாயணக் களமான பெண்களின் உடல்!



தலை, கண், காது, மூக்கு, முகம், தேகம், கை, கால்கள், இடுப்பு எனஅலங்கரிக்காத இடம் என்று எதையாவது விட்டு வைத்திருக்கிறார்கள் இந்தப் பெண்கள்? அழகு சாதனங்கள், இதர பேன்சி பொருட்கள் மூலம் பெண்கள் தினசரி 515 ரசாயணங்களை தங்கள் மீது இட்டுக்கொள்கிறார்களாம்.

அழகு சாதனங்கள் அமர்க்களமான தோற்றத்தை, அசத்தும் வாசத்தோடு தரலாம். ஆனால், அவற்றை கொண்டு வரக் ஆயிரத்தெட்டு ரசாயணங்களை தயாரிப்பாளர்கள் உபயோகப்படுத்த வேண்டியிருக்கிறது.

என்ன விஷயம் என்று பார்ப்போம்.

தலையில் போடும் ஷாம்பில், நம்மை நுரை தள்ளி கீழே தள்ளும் வகையில் 15 ரசாயணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் சோடியம் லாரல், சல்பேட் டெட்ராசோடியம் மற்றும் பிரோபிளின் கிளை சால் போன்றவை ஆபத்தானவை. இவற்றின் விளைவாக கண் எரிச்சல் மற்றும் பார்வை பாதிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

தலைக்குப் போடும் ஸ்பிரேயில் 11 ரசாயணங்கள் கலந்து வருகின்றன. இதில் ஆக்டிநோசேட், இசோப்தாலேட் ஆகிய ரசாயணங்கள் மிகவும் ஆபத்தானவை. அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சல், ஹார்மோன் கோளாறு. இதனால் நம்முடைய உடல் செல்களின் வடிவமைப்பேக்கூட மாறக்கூடிய ஆபத்து இருக்கிறதாம்.

ஐ ஷேட்களில் 26 விதமான ரசாயணங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம். அதில் பாலிதிலின் டெரிப்தாலேட் என்பது மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ரசாயணம். புற்று நோய், குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள், உடலின் உள்பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்றவை ஏற்படக்கூடும்.

கன்னத்துக்கு போடும் ருஜ் போன்றவைகளில் 16 ரசாயணங்கள் உள்ளன. இதில் எதில்பாரபின், மெதி ல்பாரபின், பிராபிபாரபின் போன்றவை அதிக ஆபத்தானவை. கன்னம் சிவந்து போதல், கன்னத்தில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் ஏற்படும்.

உதட்டுச்சாயத்தில் பாலிமென்தால், மெத்தா க்ரைலேட் உள்ளிட்ட33 ரசாயணங்கள் உள்ளன. அலர்ஜி மற்றும் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் கொண்டவை இவை.

முக அழகிற்குப் போடப்படும் லோஷன்களில் 24 விதமான ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இதிலுள்ள பாலிமெதில்மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தான ரசாயணமாகும். இவற்றால் அலர்ஜி, இம்யூன் சிஸ்டத்தில் மாற்றங்கள், புற்றுநோய்க்கான காரணிகள் ஏற்படக்கூடும்.

வேர்வை, உடல் வாசனையை மாற்றும் டியோடெரண்டுகள்: இதில் 15 விதமான ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இதில் உள்ள இசோப்ரோபில், மைரிஸ்டேட்பார்ஃபர் போன்ற ரசாயணங்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. தோல், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது. தலைவலி, மயக்கம், இயங்கும் தன்மையில் மாற்றங்கள் போன்றவை ஏற்படும்.

நெய்ல் பாலிஷ்களில் 31 ரசாயணங்கள் உள்ளன. இவற்றில் ஃபத்தாலேட்டுகள் உள்ளன. குழந்தையின்மை மற்றும் குழந்தையை உருவாக்குவதில் குறைபாடுகளை ஏற்படுத்தும்.

உடலுக்குப் போடும் பாடி லோஷன்: இதில் 32 ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இதில் உள்ள மெதில் பாரபின், ப்ராபிபாரபின், பாலி திலின் க்ளைகால் போன்றவை ஆபத்தானவை. தோல் தடிப்பு, தோல் நிறம் மாற்றம், எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை எதிர்விளைவுகள்.

ஃபேக் டான்: தொடை மற்றும் பின்பக்க இடுப்புக்குக் கீழே போடப்படும் க்ரீம் இது. இதில் 22 விதமான ரசாயணங்கள் உள்ளன. இதில் கலக்கப்பட்டுள்ள ரசாயணங்களில் எதில்பாரபின், மெதில்பாரபின், பிராபி பாரபின் போன்றவை ஆபத்தானவை. குறிப்பிட்ட பகுதியில் தோல் தடித்தல், எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் ஏற்படும்.

முட்டையை விட மட்டமான சீனப் பணம்?



இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நிலையில், 1949 ஆம் ஆண்டில் சீனாவை மக்கள குடியரசாக அறிவித்தார் அப்போதைய அதிபர் மாவோ. அப்போது சீனப் பணத்திற்கு பெரிய மதிப்பு இல்லாமல் போய்விட்டது. முட்டை ஒன்றின் விலை 10 ஆயிரம் சீனப் பணமாக இருந்தது என்றால் சீனப் பணத்தின் வீழ்ச்சி புரியும்.

இந்த நிலையை, தன்னுடைய நினைவில் இருந்து அகற்றாமல் வைத்திருந்தார் தென் சீனத்தைச் சேர்ந்த ஓவியர் குவாங்சுவோ. முட்டைகளைக் கொண்டே சீனப் பணம் ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார்.

1980இல் புழக்கத்தில் இருந்த 50 யுவான் சீனப்பணம் போல, முட்டைகளை அடுக்கி உருவாக்கிய, அவருடைய இந்த கலைப் படைப்பு குவாங்டாங்க் கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது .இந்த ஒரு சீனப்பணத்தை உருவாக்க அவர் 1000 முட்டைகளை பயன்படுத்தியிருக்கிறார்.

1000 முட்டையும் அழுகிவிட்டால் நாற்றம் தாங்காதே என்று நீங்கள் முழிப்பது புரிகிறது. இவை உண்மையில் முட்டைகள் அல்ல. கற்களைக் கொண்டே இந்த ஆயிரம் முட்டைகளையும் உருவாக்கி யிருக்கிறார் குவாங்சுவோ..

அன்றைய சீன நிலையை இந்த (கல்) முட்டையிலான ரூபாய் நோட்டு சுட்டிக்காட்டினாலும், ஆயிரம் முட்டைகளைப் பயன்படுத்தி ஒரே ஒரு ரூபாய் நோட்டை உருவாக்கியதன் மூலம், தற்போதைய சீனப் பணத்தின் பெரும் மதிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார் கில்லாடி கலைஞர் குவாங்சுவோ

வெள்ளி, நவம்பர் 20, 2009

ஆரோக்கியக் குளியல்




நாம் ஒவ்வொரு நாளும் இரவில் தூங்கப் போகிறோம். நாம் தூங்கும்போது நம் புலன்கள் அனைத்தும் ஓய்வெடுக்கின்றன. சில முக்கியமான உறுப்புகளைத் தவிற, நம் உறுப்புகள் அனைத்தும் பல கழிவுகளை நம் உடலில் உற்பத்தி செய்கின்றன. அந்தக் கழிவுகள் நம் உடலில் சேரும்போது நம் உடலில் ஒரு துர்நாற்றம் ஏற்படுகிறது, அந்தக் கழிவுகளை சுத்தம் செய்யாமல் அப்படியே சேரவிட்டால் அந்தக் கழிவுகள் நம் உடலுக்கு நோயை விளைவிக்கும். ஆகவேதான் குளிக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாள் நாம் தூங்கும்போதும் விஷயம் தெரிந்த பெரியவர்கள் சொல்லுவார்கள் அது ஒரு தற்காலிக மரணம் என்று. ஆகவே நாம் பிறந்த போது நம்மைச் சுற்றி இருந்த வேண்டாத அழுக்குகளை நீக்க நம்மைக் குளிப்பாட்டுகிறார்கள். அது போல நாம் ஒவ்வொரு நாளும் இறந்து பின் மீண்டும் பிறக்கிரோம். அப்படிப் பார்க்கும்போது தினமும் நம்மைச் சுத்தம் செய்து கொள்ள குளித்துதானே ஆகவேண்டும், அதனால்தான் குளிக்கிறோம்.

குளிப்பது என்னும் வழக்கம் ஏன் ஏற்பட்டது, சுத்தமும் சுகாதாரமும் புரிய ஆரம்பித்தபோது, நீரினால் நம் உடலைக் கழுவினால் அசுத்தங்கள் நீங்கிவிடும் என்று உணர்ந்த போது, ஏற்பட்ட ஒரு நடைமுறைதான் குளியல் என்பது.

குளிப்பதில் எத்தனை வகைகள் இருக்கிறது என்று பார்ப்போம்.

முதலில் ஏற்பட்டது ஆற்றுக் குளியல். நாம் நதிக்கரையில்தான் நம் நாகரிகத்தை தொடங்கினோம். ஆற்றுக் குளியலில் பலவகையான அபாயங்கள் உண்டு. காவிரியில் நீர் ஓடிக்கொண்டிருக்கும், பெண்டிரும் ஆடவரும் குளித்துக் கொண்டிருப்பார்கள், திடீரென்று நீர் ஏகத்துக்குப் பெருகி வெள்ளமாய் வந்து பலரை அடித்துக்கொண்டு போயிருக்கிறது. அது மட்டுமல்ல ஆற்றில் குளிக்கும் போது எந்த இடத்தில் ஆழம் அதிகம், எங்கு குளித்தால் நீரோட்டம் நம்மை அடித்துகொண்டு போகாமல் இருக்கும் என்பது தெரிந்து குளிக்க வேண்டும். சில இடத்தில் பாறைகள் நீட்டிக் கொண்டிருக்கும். நாம் குளிக்கும்போது அந்தப் பாறைகள் நம் கையையோ காலையோ கிழித்துவிடக்கூடும். ஆக அந்த ஆற்றில் ஏற்கெனெவே குளித்துப் பழக்கப்பட்டவர்களிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பிறகு ஆற்றில் குளித்தால் நல்லது.

அடுத்ததாக கிணற்றுக் குளியல். பல கிராமங்களில் விவசாயத்தை முன்னிட்டுப் பெரிய கிணறுகளை வெட்டி வைத்திருப்பார்கள். அந்தக் கிணறுகளில் பல சிறுவர்கள் மேலிருந்து சத்தம் வரும்படியாக குதித்து நீரைக் கிழித்துக்கொண்டு நீந்திக் குளிப்பார்கள். அவர்களுக்குத் தெரியும் அந்தக் கிணற்றின் பக்கவாட்டுச் சுவரில் எங்கு பள்ளமாய் இருக்குமென்று. அங்கு போகும் போதுமிகவும் எச்சரிக்கையுடன் போவார்கள். அதுமட்டுமல்ல கிணற்றில் சில சமையம் தவளை, மீன்கள் பாம்பு போன்றவை இருக்கக் கூடும். அவைகள் வந்தால் எப்படி சமாளித்து மேலே வரவேண்டும் என்று அவர்களுக்கு இயல்பாகவே பயிற்சி வந்துவிடும்.

அடுத்ததாக குளங்களில் குளித்தல். இது மிகவும் ஆபத்தானது, ஏனென்றால் குளங்களில் பாசி போன்ற தாவரங்கள் நம்மை வழுக்கி விட்டுவிடும். அதுமட்டுமல்ல, தாமரை, அல்லி போன்ற மலர்களின் கொடிகள் குளங்களில் கீழே வேரூன்றி இருக்கும். அந்தத் தாவரத்தின் தண்டுகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு இருக்கும். நாம் கீழே சென்று நீந்தும் போதோ, அல்லது பாசியின் வழுக்கலாலோ உள்ளே விழுந்து கீழே சென்று மேலே வர முயலும் போது நம் கால்கள், கைகள் அந்தத் தாவரத்தின் பின்னலில் சிக்கிக்கொண்டு நம்மை மேலே வரமுடியாமல் செய்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் மூச்சுத்திணரி இறக்கும் வாய்ப்பு அதிகம்.



அடுத்ததாக கடல் குளியல். மாசிமகம் அன்று கடலில் குளித்தால் புண்ணியம் என்னும் நம்பிக்கை இருக்கிறது, அப்படிக் கடலில் குளிக்க ஆசை கொண்டோர் கவனிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருக்கின்றன. கடல் அலைகள் கடலின் ஓரத்திலேதான் இருக்கும். அந்த அலைகளில் லாவகமாக இறங்கி நீந்தி நடுக்கடலுக்கு செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போது நம்மால் எவ்வளவு தூரம் நீந்த முடியும் என்று நம்மை, நம்முடைய திறனை எடைபோடாமல் அதிக தூரம் கடலுக்குள் செல்லக் கூடாது. நீந்தத் தெரியாதவர்கள் கடலில் இறங்கவே கூடாது, ஏனென்றால் அலைகள் கரைக்கு வரும்போதே சீற்றத்துடன்தான் வரும். வந்துவிட்டுப் பின்னுக்குத் திரும்பும்போது மிகவேகமாகத் திரும்பும். அப்படித் திரும்பும் கடலலை என்னதான் எச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் காலை வாரி இழுத்துக்கொண்டு போய்விடும்.

நீந்தத் தெரிந்தவர்களா யிருந்தாலும் கடலுக்குள் போகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனென்றால் நீந்தத் தெரிந்தால் மட்டும் போதாது. கடல் நீருக்கு இயல்பாகவே ஒரு அழுத்தம் உண்டு. அந்த அழுத்தத்தை சமாளிக்கப் பழக வேண்டும். அதுவுமன்றி சுறா, திமிங்கிலங்கள் போன்ற பெரிய வகை மீன்கள் கடலில் உண்டு, அவைகளிடம் மாட்டிக்கொண்டால் தப்பிப்பது கடினம்.

சரி ஆறு, குளம், கிணறு இவைகளில் குளிப்பதற்கு இவ்வளவு தெரிந்திருக்க வேண்டுமா நமக்கெதற்கு வம்பு என்று வீட்டிலேயே குளியலறையில் குளிக்கலாம் தவறில்லை, ஆனால் குளிக்க வேண்டும்.

ஆமாம் ஏன் குளிக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டோம் எப்படிக் குளிக்க வேண்டும் என்று பார்க்கலாமா? என் தாயார் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ரகசியத்தை இப்போது சொல்லப் போகிறேன்.

எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊர் நீர்நிலைகளில் குளிக்கும்போது அந்த நீர்நிலை குளிப்பதற்கு ஏற்றதுதானா என்று தெரிந்து கொண்டு குளிக்க வேண்டும். அப்படிக் குளிப்பதற்கு முன்னால் அந்த நீர் நிலையிலிருந்து சிறிதளவு தண்ணீரை வலது கைகளின் உள்ளங்கை அளவு எடுத்து மூன்று முறை குடித்துவிட்டு, பிறகு குளித்தால் அந்த நீர் நம்மை பாதிக்காமல் இருக்கும் என்பார்கள், ஏனென்றால் உள்ளே இருப்பதும் அந்த நீர்நிலையின் தண்ணீர், வெளியே நம் உடலில் படுவதும் அந்த நீர்நிலையின் தண்ணீர் எனும்போது இரண்டும், அதாவது உள்ளும் புறமும் சமனப்பட்டு எவ்வித எதிர் விளைவுகளும் ஏற்படுத்தாமல் இருக்கும் என்பார்கள் என் தாயார். இன்று வரை நான் அதைக் கடைபிடித்து இருக்கிறேன். நாடகம், திரைத்தொடர்கள், திரைப்படம் போன்றவைகளில் நடிக்க நான் பல ஊர்களுக்கு சென்றிருக்கிறேன். பல நீர் நிலைகளில் குளித்திருக்கிறேன், ஆனால் எந்த நீர்நிலைகளும் என்னை பாதித்தது இல்லை.

வீட்டில் நாம் குளிக்கும்போது நீரை அதிகம் செலவழிக்காமல், ஆனால் சுத்தமாகக் குளிப்பதற்கு ஒரு முறை இருக்கிறது. நீரால் முதலில் உடலை நனைத்துக்கொண்டு நாம் உபயோகிக்கும் சோப்பை எடுத்து முதலில் முகத்தை சுத்தம் செய்துவிட்டு, நீரால் கழுவிவிட்டு பிறகு உடலை சுத்தம் செய்ய ஆரம்பித்தால் கண்களில் சோப்பு உள்ளே சென்று கண்கள் எரிவதை தடுக்கலாம். மற்றும் நாம் கண்களால் நன்றாகப் பார்த்து மற்ற பாகங்களை சுத்தம் செய்ய வசதியாய் இருக்கும். சோப்பைக் கைகளில் தடவிக்கொண்டு கைகளால் உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டு பிறகு நீரைத் திறந்து குளிக்க ஆரம்பித்தால் குறைவான அளவு தண்னீரிலேயே சுத்தமாகக் குளித்து விடலாம். பிறகு தலையில் தண்ணீரை ஊற்றி ஷாம்பூவோ, அல்லது சிகைக்காயோ தேய்த்துக்கொண்டு உடனே தண்ணீரால் தலையைக் கழுவிவிட்டு உடனடியாக முதலில் தலையைத் துடைத்துக் கொண்டால் சளிபிடிப்பது, தலை வலி போன்ற தொந்தரவுகளிலிருந்து தப்பித்துவிடலாம். பிறகு உடலை சுத்தமாகத் துடைத்துக்கொண்டு வெளியே வந்து கன்னடியில் முகம் பார்த்துத் தலை சீவும் நேரத்துக்குள் தலை முடி காய்ந்து பதமாகவும் இருக்கும்.

முக்கியமான ஒரு செய்தி இருக்கிறது. தூங்கும் போது நம் உறுப்புகள் இளைப்பாறுகின்றன. அப்படி இளைப்பாறும் போது அந்த தசைகள், இறுகிவிடுகின்றன. அப்படி இறுகிவிட்ட தசைகளைத் தளர்த்தி எளிதாக செயல்படுத்த நம் உள்ளங்கைகளினால் நன்றாகத் தேய்த்து விடுவதால் அத்துணை தசைகளும் மீண்டும் புத்துணர்வு பெற்று இயல்பாக இயங்கத் தொடங்கும்.

இதைத்தான் அழகு நிலையங்களில் மசாஜ் என்று சொல்லுகிறார்கள். மருத்துவமனைகளில் ஹீட் தெரப்பி என்றும் சொல்கிறார்கள். நம் பணத்தையும் வீணடித்து இவ்வாறெல்லாம் செய்வதை விட தினமும் குளிக்கும்போது நம் உள்ளங்கைகளால் நாமே நம் உடலை நன்கு தேய்த்துப் புத்துணர்வு பெறச் செய்யலாமே. என்ன தினமும் குளிப்பது எவ்வளவு நல்லது என்று புரிகிறதா? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமன்றோ?

மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ



அதிகாலை குளிக்கும் நோக்கம்

(அசலம்)
அதி காலை குளிப்பதின் நோக்கம் பற்றி ஒரு கட்டுரை எழுத திரு நடரஜன் கல்ப்பட்டு அவர்கள் வேண்ட, இதோ எம்மால் முடிந்ததை எழுதுகிறோம். தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துமாறு வாசகர்களை கோருகிறோம்.

ஒரு நல்ல காரியம் அல்லது தெய்வீகக் காரியத்தில் ஈடுபடும்போது, குளிக்க வேண்டும். எதற்கு? நம் தேகத்தை சுத்தம் செய்து, செய்யும் காரியத்திற்குத் தகுதி கொடுப்பதற்காக. தேகம் மலினமாக இருந்தால் நாம் செய்யும் காரியத்திலும் மலினம் வர ஹேதுவாகும். நம் கையில் மண் துவண்டு கிடக்கும்போது, நாம் ஏதொரு தின்பண்டத்தைக் கையால் எடுத்தாலும் அதில் மண் புரண்டுவிடும். அதை புஜித்தால் வயத்துக்கோளாறு ஏற்ப்படும், இல்லையா? அதைத் தடுக்கவே, நாம் தேகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவே குளிக்கிறோம். நம் தேகத்தில் பற்றியுள்ள வியர்வை நாற்றம் நாம் ஈடுபடும் காரியத்தில் நம் கவனத்தைச் செலுத்தாமல் நாற்றத்தையே கவனித்துக் கொண்டிருப்போம். செய்யும் காரியம் ஈடேறாது.

வேதாந்த வழியில் சிந்த்திப்போமானால், நாம் பகலில் உணர்வுடன் இருப்பதற்கு ஜீவித்திருக்கிறோம் எனக் கொள்வோம். அப்படியாகில் இரவில் உணர்விழந்து இருப்பதால் தார்காலிக மரணம் எனக் கூறவேண்டும். மறு நாள் எழுந்ததும் மீண்டும் உணர்வுடன் இருக்கிறோம். அதாவது மீண்டும் பிறக்கிறோம். ஒரு குழந்தை பிறந்ததும் என்ன செய்வோம்? அதை முதலில் குளிப்பாட்டுவோம், இல்லையா? அதுபோல் பிறக்கும்போது குளிக்க வேண்டும். ஏனென்றால் அது மறு பிறவிக்கு சமானம். புதிது உடுப்பதற்குமுன் குளிப்பது அவசியமல்லவா? அதேபோல் புது வாழ்வு துவங்குமுன் குளிப்பது அவசியம். புது வாழ்வு எப்போது துவங்குகிறது. நாம் உணர்விற்கு வந்ததும், அதாவது, உறக்கத்திலிருந்து எழுந்ததும். இது தாற்காலிகப் பிறப்பு இறப்பு. ஆனாலும் தினம் நிகழும் ஒரு நிகழ்ச்சி. அதனால் தினமும் அதிகாலை குளிக்கிறோம். இது நமக்கு ஒரு சுறுசுறுப்பைத் தருகிறது.

எழுந்ததும் நாம் சிறுனீர் கழிப்பதும், மலவிஸர்ஜனம் பண்ணுவதும் எதற்கு? நம் உடலில் முன் தினம் சென்ற ஆஹாராதிகள் தகனத்திர்க்கு பிறகு மீதமிருக்கும் அழுக்கு வஸ்த்துக்களை களைய. அப்படியானால் நம் தேகம் மலின்ப்பட்டுவிட்டது இல்லையா? அப்படி மலினத்தை நீக்கினால் தேகத்தை சுத்தம் செய்யவேண்டாமோ? தவிர, உறக்க்த்தில் சோம்பேரியாக இருந்தோம். சுறுசுறுப்பு வர நல்ல ஜெலத்தில் குளிப்பது அவசியம்.

தெய்வீகமாகப் பார்த்தால், அதி காலை குளிக்க வேண்டும். ஏன்? சூரியன் நமக்குக் கண்ணில் படும் தெய்வம். தெய்வ ஸன்னிதியில் குளிக்காமல் இருக்கலாமோ? அதனால் சூரியன் உதிக்குமுன் அவரை வரவேற்க சூரியோதயத்திற்கு முன்னமேயே குளிக்கிறோம். தெய்வத்தின்முன் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது எல்லோரும் அறிந்த கருத்தே. ஒரு பூஜையில் ஈடுபடும்போது, தேகசுத்தம், மனச்சுத்தம், சித்த சுத்தம் என்று மூன்று வகை சுத்தங்கள் தேவை. தேக சுத்தம் நம் உடலில் ஊறும் நாற்றத்தைக் களைய. மன சுத்தம் மனதை விசாரத்திலிருந்து விடுபடுத்தி ஏகாக்ரமாக வைத்தால் தான் செய்யும் காரியத்தில் மனம் ஈடுபடும். மனம் ஈடுபடாமல் செய்யும் காரியம் பலனளிக்காது. சித்தமும் சுத்தமாக வேண்டுமானால் நம் விசாரம் ஸாத்வீகமாக இருக்க வேண்டும். தெய்வம் சுத்தவஸ்து. அது நித்திய வஸ்து. அது ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற முப்புடிக்கு அப்பர்ப்பட்டது. நாம் இம்மூன்று பிணியிலும் அகப்பட்டுள்ளோம். தெய்வசிந்தனைக்கு இந்த மூன்றுவகை (தேக, மன, சித்த) சுத்தங்கள் தேவை. அதில் முதலில் தேகசுத்தம். காலையில் எழுந்ததும் நாம் பூஜை, ஜெபம் இத்யாதிகளில் ஈடுபடுவோம். அப்பொழுது இந்த மூன்றுவகை சுத்தமும் தேவை. ஆகையால் அதிகாலை குளீப்பது மிக அவசியம்.



அசலம்

எப்பொழுதெல்லாம் நீராட வேண்டும்?

ஆசாரக் கோவை குறிப்பிடுவது இது!
தேவர் வழிபாடு; தீக்கனா வாலமை;
உண்டது கான்றல்; மயிர் களைதல் உண்பொழுது
வைகு துயிலொடு இணை விழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல்; ஏனை மயிலுறல்; ஈரைந்தும் ஐயுறாது ஆடுக நீர்!

(நீர் நிலைகளில்) எப்படி நீராட வேண்டும்?

நீராடும் போழ்தில் நெறிப்பாட்டார் என்ஞான்றும்
நீந்தார்; உமியார்; திளையார்; விளையாடார்;
காய்ந்தது எனினும் தலையொழிந்து ஆடாரே
ஆய்ந்த அறிவினர்!

குளிப்பது என்பது உடல் அழுக்கு துர்நாற்றம் நீங்கி ஆரோக்கியமாக இருக்க என்பதற்காகத் தானே அல்லாது வேறெதற்கும் அல்ல. இறை வழிபாட்டிற்கு முன் குளிப்பது என்பது கூட, ஆரோக்கியத்தின் காரணத்திற்காகத்தான்.

"உடலார் அழியின் உயிரார் அழிவர்;
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"

அது ஒரு நல்ல குடிப்பிறப்பு உருவாக்கும் அடிப்படை ஒழுக்கம். தாயோ தந்தையோ அதனை குழந்தைகளுக்குப் போதிக்காத வரை, வழக்கத்தில் வராது. ( குளு குளு அறையில், வேலை ஏதுமின்றி இருப்பாருக்கு வியர்வை வர வாய்ப்பே இலாத வகையில், துர்நாற்றம் வர வாய்ப்பில்லை என்பதால் ஏன் குளிக்க வேண்டும் எனக் கேட்கும் அறிவுபூர்வமான ??!! குழந்தைகளின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல?)

அன்புடன்
செபரா

குளிப்பது குறித்து எனது கருத்தாவது யாதெனில் அதுவும் இவ்வுலகில் இன்பம் தரும் செயல்களில் ஒன்று என்பதாகும். ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடும் இன்பம் தன்னை மறந்து அனுபவிக்கத் தக்கது. உடலின் களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் இயற்கையோடு இயைந்து இன்புறச்செய்கிறது நீராடல்.

இதனால்தான் தற்காலப் புலவர் ஒருவர், "குற்றாலம் அருவியிலே குளித்ததுபோல் இருக்குதாம், மனசை மயக்குதாம் சுகமும் கிடைக்குதாம்" என்று பாடியுள்ளார். இப்பாடல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "நல்லவன் வாழ்வான்" எனும் திரைப்படத்தில் தன் காதலியாக நடிக்கும் ராஜசுலோசனாவுடன் கிணற்றடியில் நீராடும் காட்சியில் இடம் பெறுகிறது.

பாகவத புராணத்தில் கிருஷ்ண பரமாத்மா கோபிகாஸ்த்ரீகளுடன் நீராடி மகிழ்ந்ததை ஜலக்ரீடை என்ற உலகியல் இன்பம் காண்பதற்கொப்பாகக் குறிப்பிடுகின்றனர் நம் முன்னோர்கள்.



இதனை ஸ்நானவின்பம் என்று மஹாகவி பாரதியார் தமது பகவத்கீதை உரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

"இனி, புத்த மதம் இழைத்த பெருந்தீங்கு யாதெனிலோ இடைக்காலத்து மாயாவாதத்தை நம்முள்ளே எழுப்பிவிட்டது. உபநிஷத்துக்களிலும் வேதத்திலும் 'மாயா' என்ற சொல் பராசக்தியை குறிப்பது. இடைக்காலத்தில் மாயை பொய்யென்றதொரு வாதம் உண்டாயிற்று. இதனால், ஜகத் பொய்; தேவர்கள் பொய்; சூரிய நக்ஷத்திராதிகள் பொய்; மனம் பொய்; சைதந்யம் மாத்திரம் மெய். ஆதலால், இந்த உலகத்துக் கடமைகளெல்லாம் எறிந்துவிடத் தக்கன. இதன் இன்பங்களெல்லாம் துறந்துவிடத் தக்கன, என்றதொரு வாதம் எழுந்தது. 'இவ்வுலக இன்பங்களெல்லாம் அசாசுவதம்; துன்பங்கள் சாசுவதம்; இத்தகைய உலகத்தில் நாம் எந்த இன்பங்களையும் தேடப் புகுதல் மடமையாகும். எனவே எந்தக் கடமைகளையுஞ் செய்யப்புகுதல் வீண் சிரமமாகும்' என்ற கட்சி ஏற்பட்டது. ஆனால், இவர்கள் எல்லா இன்பங்களையுந் துறந்து விட்டதாக நடிக்கிறார்களேயன்றி, இவர்கள் அங்ஙனம் உண்மையிலே துறக்கவில்லை. இவ்வுலகத்தில் ஜீவர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை, கடமைகளைத் துறந்து விட்டுச் சோம்பேறிகளாகத் திரிதல் சாத்தியம். அது மிக சுலபமுங்கூட. இந்தச் சோம்பேறித்தனத்தை ஒரு பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. இவர்கள் கடமைகளைத் துறந்தனரேயன்றி இன்பங்களைத் துறக்க வில்லை. உணவின்பத்தைத் துறந்து விட்டார்களா? சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், அப்போது நீங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தொழில் செய்து ஜீவிக்க வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை. ஸ்நானவின்பத்தைத் துறக்கவில்லை. தூக்கவின்பத்தைத் துறக்கவில்லை. கல்வியின்பத்தைத் துறக்கவில்லை. புகழின்பத்தைத் துறக்கவில்லை. உயிரின்பத்தைத் துறக்கவில்லை. வாதின்பத்தைத் துறக்கவில்லை. அவர்களில் முக்கியஸ்தர்களாகிய மடாதிபதிகள் பணவின்பத்தையுந் துறக்கவில்லை. இவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத் கீதை எழுதப்பட்டது.

ஆகிரா



குளிப்பது உடலை குளிமை படுத்துவதற்காக் அல்ல, சுத்தப்படுத்துவதற்காக. நமது பண்பாடு, நாகரிகம், குளிக்கும்பொழுது, வேத மந்திரம் "Aapo bhawantu peetaye Shanyorabhi sravantu nah" சொல்லிகொண்டு குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தணணீருக்கு மட்டும் அல்ல, நாம் தொடர்ப்பு (contact) கொள்ளும் பூமி, தண்ணீர், காற்று, நெருப்பு, ஈதர், புத்தி, மனம், தான் (என்னும் அகங்காரம்) யாவற்றுடனும் மனப்பான்மை (Mental attitude) இருக்க வேண்டும்.

இதை மனதில் கொண்டுதான் பெரியவர்கள் ஐந்து வகையான குளியல் முறையை, பணக்காரன், ஏழை, ஆரோக்கியமானவன், நோயாளி, வரண்ட பூமியில் வசிப்பவன், ஏரிகள் சூழ்ந்த (ாஷ்மீர் பகுதியில்) வசிப்பவன், ஆண், பெண் இருபாலருக்கும், உகந்தவாறு, ஏற்படுத்தியுள்ளனர். முதலாவது பஸ்மஸ்நானம்.(சம்ஸ்கிருதத்தில் ஸ்நானம் என்றல் நீராடுதல், பஸ்மம் என்றால் விபூதி என்று அர்த்தம்). தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடத்தில், சாம்பல் (விபூதி), மண், இவற்றை உடலில் பூசிக்கொள்வது. இதில் மற்ற இந்து தனிமங்கலும் (Elements) பல அளவுகளில் கலந்துள்ளது. இந்த தனிமங்கள் கடவுளின் வெளிப்பாடு (manifestation of Lord) என்ற ஞாபகம் சுத்ததை (Purity) அளிக்கும்.

இரண்டாவது ஜலஸ்நானம்;

மூன்றாவது அக்னிஸ்நானம் - இதை Sun Bath என்று சொல்லலாம். மண்ணிலும் தண்ணீரிலும் சுத்தப்படாதது அக்னியால் கட்டாயம் சுத்தமாகும். சில சாதுக்கள் நெருப்பை தன்னை சுற்றி மூட்டி அதன் நடுவில் உட்காருவார்களாம். உஷ்ணத்தினால் உடலில் உள்ள வியர்வை வெளிப்பட்டு உடல் தூய்மையாகும்.

நான்காவது காற்று குளியல் - மனிதன் எவ்வளவு அசுத்தமாக இருந்தாலும், நோயாளியானலும், நிம்மதியின்றி மனசஞ்சலமுடையவனானாலும், சுவாசப் பயிற்ச்சியினானால் (குரு மூலமாக) breathing exercise உடல் நலம் பெற்று, தேகத்தில் பொலிவு, புற அக அழகு பெறலாம். சுவாசப் பயிற்ச்சியினால் சுத்தம் அடைவது காற்று குளியல் எனப்படும்

ஐந்தாவது ஈதர் குளியல் - யோகத்தில் இது மிகத்தூய்மையான ஒருமைப் படுத்தல் எனப்படும் (ethereal concentration). ஐந்து தனிமங்களில் ஒன்றை விட அடுத்தது அதிகத் தூய்மை வாய்ந்தது. அதாவது மண்னைவிடத் தண்ணீர் தூய்மையனது, தனண்ணீரைவிட நெருப்பு, நெருப்பைவிடக் காற்று, காற்றைவிட ஈதர் தூய்மையானது.

குளிக்காமல் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது. குளிப்பது நம்மை தூய்மைபடுத்துகிறது, சுகாதரமற்ற சூழ்நிலையில் தினமும் நம் உடல் அழுக்கடைகிறது, குளிப்பதால் உடல் தூய்மையாக்கப்படுகிறது. குளியல் சோம்பேறித்தனத்தைப் போக்குகிறது, புத்துணர்வைத் தருகிறது. மனதை பலப்படுத்துகிறது. திடமான மனதுடன், புத்துணர்வு பெற்ற தேகத்துடனும் நாம் வேலையை அதிகத் திறமையுடன் செய்ய முடியும்.

இறைப்பற்றுக்கு அடுத்தது தூய்மை என்று சொல்லப்படுகிறது. தூய்மையும், அசுத்தமும் எல்லா செய்கைகளிலும் கலந்துள்ளது என்பது பொதுக்கருத்து. மிகப்பல சமயப் பழக்க வழக்கங்களில், தூய்மை முக்கியத்வம் வாய்ந்துள்ளது. கலப்படம், மாசு (pollution); எச்சில் (spittle) இன்னும் பல அசுத்தமாகக் கருதப்படுகிறது. மேலைய நாட்டிற்குச் செல்வதும்,(சாஸ்திரப்படி); கீழ்தரமான இடங்களில் சஞ்சரிப்பதும், கொள்கைகளில் மாறுவதும், உடலில் ஏற்படும் கழிவுகள், இவைகளும் உடலை அசுத்தப்படுத்துகின்றன.

சுத்தமானது, உடல், மனம், உணர்ச்சிப் பெருக்கு (Emotion); மதச்சடங்கு முறை; ஆன்மீக நிலை இவற்றைச் சார்ந்தது.

அடிக்கடி குளிப்பதால் உடல் சுத்தம், தியானத்தினால் மன சுத்தம், அமைதியாக இருப்பதாலும், நல்ல சேர்க்கையாலும்; உணர்ச்சி சார்ந்த சுத்தம், சாஸ்த்திரப்படி "நியாய, "நியம"ங்கள், ஜப தபம், கடைப்பிடிப்பதால் மதச்சடங்கில் சுத்தமும்; பிராயச்சித்தத்தினால் ஆன்ம சுத்தமும் கிடைக்கப்பெறலாம்.

பெரியவர்கள் சொல்லியிருப்பது குளிர்ந்த நீரில் குளிப்பதும், வெந்நீர் குடிப்பதும் சாலச்சிறந்துது என்று (ஆனால் நாம் கடைப்பைடிப்பதோ நேர் எதிர்). ஆற்றில் ஓடும் திசை நோக்கிக் குளிப்பது மிக நல்லது. நீரில் மூழ்கிக் குளிப்பது (ஆவாகஹன ஸ்நானம்) பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குளத்தில், கிணற்றுத் தண்ணீரில் குளிக்கும் பொழுது கூட கிழக்கு நோக்கி நின்று குளிக்க வேண்டும்.
இரவில் குளிப்பதும், வெந்நீரில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஆடை இல்லாமல் குளிப்பது தவறு. இது தடைபடுத்த்ப்பட்டுள்ள்து (strictly prohibited). குளித்தபிறகு, துவைத்து, காயவத்த உடையைத்தான் அணிய வேண்டும்.

நம் பெரியவர்கள் குளிப்பதை பலவகைப்படுத்தி உள்ளனர: 1. மந்த்ர ஸ்நானம் 2. பௌம ஸ்நானம் 3. ஆக்னேய ஸ்நானம் 4. வாயவ்ய ஸ்நானம் 5. திவ்ய ஸ்நானம் 6. மானச ஸ்நானம் 7. வருண ஸ்நானம்

குளிக்கும் நேரத்தைக் கொண்டு - ப்ராத ஸ்நானம் (early morning bath), மாத்யானிக ஸ்நானம் (சூரியன் உச்சியில் இருக்கும் பொழுது குளிப்பது), க்ரியங்க ஸ்நானம் (done on special occassion)

பார்வமணி